search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா ஐகோர்ட்"

    மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜக தலைவர் அமித்ஷா நடத்தவுள்ள யாத்திரைக்கு கொல்கத்தா ஐகோர்ட் அனுமதி மறுத்துள்ளது. #CoochBeharRathyatra #BJP #KolkattaHighCourt
    கொல்கத்தா:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் 3 நாட்கள் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரைக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமை தாங்குகிறார்.

    இந்த யாத்திரை கூச்பெகரில் நாளை தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்த யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி மறுத்து வந்தது.

    இந்நிலையில், யாத்திரை நடத்த அனுமதி கோரி மாநில பாஜக சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.



    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத ரீதியிலான மோதல்கள் ஏற்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

    கொல்கத்தா ஐகோர்ட் யாத்திரைக்கு தடை விதித்துள்ளது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #CoochBeharRathyatra #BJP #KolkattaHighCourt
    மேற்கு வங்காளம் மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கை கொல்கத்தா ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது. #Panchayatpolls #violence
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பரவலாக வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடியது.

    வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்காளத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின.

    இந்நிலையில், சாந்திபூர் பகுதியின் நதியா மாவட்டத்தில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு மையத்தை கையகப்படுத்தச் சென்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சவுஜித் பிராமனிக் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

    மேலும், பிரக்னாஸ் அம்டங்கா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    முர்ஷிதாபாத் பகுதியில் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஆரிப் அலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கணவன் மனைவி கொல்லப்பட்டு, அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    தொடரும் கலவரங்கள் காரணமாக, பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல அச்சம் தெரிவித்தனர். வன்முறை கும்பலால் 5 பத்திரிக்கையாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். இன்று மாலை நிலவரப்படி தேர்தல் சார்ந்த மோதல்களில் 12 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

    இந்த தகவல்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தொலைக்காட்சிகள் மூலமாகவும் நேரடியாக பகிரப்பட்டதை கண்ட சில வக்கீல்கள் அந்த காட்சிகளை தங்களது கைபேசி மூலம் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதிகளிடம் காட்டினர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் வக்கீல்கள் யாராவது இச்சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜோதிர்மாய் பட்டாச்சாரியா தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு ஏற்றது.

    மனுதாரர்களின் புகார்கள் தொடர்பாக மேற்கு வங்காளம் மாநில தலைமை செயலாளர் மற்றும் அம்மாநில தலைமை தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  #Panchayatpolls #violence
    ×