search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரியா ஓபன் பேட்மிண்டன்"

    • அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை வென்றனர்.
    • சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு ஏற்கனவே 2 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.

    கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி தொடர்ந்து சிறப்பான வெளிப்படுத்தியது.

    காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை வீழ்த்திய இவர்கள், அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை வென்று இறுதிச்சுற்றை உறுதி செய்தனர்.

    இந்நிலையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில், சாத்விக்-சிராஜ் ஜோடி இந்தோனேசியாவின் ஆல்பியன் ஆர்டியாண்டோ ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், சாத்விக்-சிராஜ் ஜோடி 17-21, 21-23, 21-14 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கொரிய ஓபன் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    சாத்விக்-சிராக் ஜோடி கடந்த மாதம் இந்தோனேசிய ஓபனிலும், கடந்த மார்ச் மாதம் சுவிஸ் ஓபனிலும் சாம்பியன் பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. 

    • சீன ஜோடியிடம் இதற்கு முன்பு இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்தனர்.
    • சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு இரண்டு சர்வதேச பட்டங்களை வென்றுள்ளது.

    கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை வீழ்த்திய இவர்கள், இன்று அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை எதிர்கொண்டனர்.

    விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாத்விக்-சிராக் ஜோடி 21-15, 24-22 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். சீன ஜோடியிடம் இதற்கு முன்பு இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்த நிலையில் முதல் முறையாக இன்று வெற்றி பெற்றுள்ளனர்.

    சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு இந்தோனேசிய சூப்பர் 1000 மற்றும் சுவிஸ் ஓபன் சூப்பர் 500 என இரண்டு சர்வதேச பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. 

    • கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    யோசு:

    கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-14, 21-17 என்ற நேர்செட்டில் ஜப்பானின் டகுரோ ஹோகி, யூகோ கொபாயஷி இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்திய ஜோடி, ஜப்பான் ஜோடியை எதிர்கொள்கிறது.

    • ஆண்கள் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் பிரனோய் தோல்வியடைந்தார்.
    • ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

    கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனோய், ஹாங்காங் வீரர் லீ சிக் யுவுடன் மோதினார். இதில் ஹாங்காங் வீரர் 21-15, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் பிரனோயை வீழ்த்தினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், ஜப்பான் வீரர் கோடா நரோகாவுடன் மோதினார். இதில் ஜப்பான் வீரர் 21-14, 18-21, 21-17 என்ற செட் கணக்கில் இந்திய வீரரை வீழ்த்தினார்.

    • பெண்கள் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.
    • ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் 2-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், உள்ளூர் வீரர் சோய் ஜி ஹூனை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். அவர் 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி

    பெண்கள் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேயின் பை யூ போவிடம் தோல்வியடைந்தார்.

    சிந்து 18-21, 21-10, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 58 நிமிடங்கள் நடைபெற்றது.

    • சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-16, 21-14 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சுபாக் ஜோம்கோஹ்- கிட்டின்போங் கெட்ரின் ஜோடியை வீழ்த்தியது.
    • மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன் - துருவ் கபிலா ஜோடி சீனாவின் லி யு சென் - யுயான் யி இணையை சந்தித்தது.

    யோசு:

    கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-16, 21-14 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சுபாக் ஜோம்கோஹ்-கிட்டின்போங் கெட்ரின் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன் - துருவ் கபிலா ஜோடி சீனாவின் லி யு சென் - யுயான் யி இணையை சந்தித்தது. இதில் முதல் செட்டில் இந்திய ஜோடி 5-6 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது அர்ஜூன் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக விலகினார். இதனால் சீன ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றை எட்டியது.

    • இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் உள்பட முன்னணி வீரர்கள் சிலர் கடைசி நேரத்தில் விலகியுள்ளனர்.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் கலந்து கொள்கிறார்.

    கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து சமீபத்தில் கனடா ஓபனை வென்ற இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் உள்பட முன்னணி வீரர்கள் சிலர் கடைசி நேரத்தில் விலகியுள்ளனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் கலந்து கொள்கிறார். அவர் தனது முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்கியை எதிர்கொள்கிறார். பிரியான்ஷூ ரஜாவத், மிதுன் மஞ்சுநாத், கிரண் ஜார்ஜ் ஆகிய இந்தியர்களும் களம் காணுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருப்பவருமான இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் சீன தைபேயின் பாய் யு போவுடன் மோதுகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற சிந்து அதன் பிறகு எந்த பட்டமும் வெல்லவில்லை.

    இந்த ஆண்டில் மாட்ரிட் மாஸ்டர்ஸ் போட்டியில் இறுதி சுற்றை எட்டியதே அவரது சிறந்த செயல்பாடாகும். சமீபத்தில் கனடா ஓபனில் அரைஇறுதியிலும், அமெரிக்க ஓபனில் கால்இறுதியிலும் தோற்று வெளியேறினார். இதனால் அவர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கையில் ஏந்தி ஒரு ஆண்டு கால ஏக்கத்தை தணிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்திய வீராங்கனைகள் ஆகார்ஷி காஷ்யப், மாள்விகா பான்சோத் ஆகியோரும் ஒற்றையர் பிரிவில் சாதிக்கும் ஆவலுடன் உள்ளனர்.

    இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி சிராக் ஷெட்டி, அர்ஜூன்துருவ் கபிலா, திரிஷா ஜாலி காயத்ரி கோபிசந்த் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    ×