என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கைரானா மக்களவை தொகுதி
நீங்கள் தேடியது "கைரானா மக்களவை தொகுதி"
உ.பி.யின் கைரானா மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KairanaBypoll #Electioncommision
புதுடெல்லி:
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி எம்.பியான பா.ஜ.க.வை சேர்ந்த ஹுகும் சிங் கடந்த பிப்ரவரியில் காலமானார். இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா-கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதிக்கும் என மொத்தம் 4 மக்களவை தொகுதிகளுக்கும் மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், உ.பி.யின் கைரானா மக்களவை தொகுதியில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் கைரானா தொகுதியில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா - கோண்டியா தொகுதியில் 42 சதவீதமும், பால்கர் தொகுதியில் 46 சதவீதம் வாக்குப்பதிவும் நடைபெற்றது.
மேலும், நாகாலாந்தின் ஒரு தொகுதியில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று இடைத்தேர்தல் நடைபெற்ற மக்களவை தொகுதிகளின் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர வேலை செய்யவில்லை என எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிக வெப்பத்தின் காரணமாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர வேலை செய்யவில்லை. மக்களவை தொகுதிகள் இடைத்தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 31-ம் தேதி தொடங்கி, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். #KairanaBypoll #Electioncommision
உ.பி.யின் கைரானா தொகுதி உள்பட 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. #KairanaBypoll #Electioncommision
புதுடெல்லி:
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி எம்.பியான பா.ஜ.க.வை சேர்ந்த ஹுகும் சிங் கடந்த பிப்ரவரியில் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா-கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே , உ.பி.யின் கைரானா தொகுதி உள்பட 4 மக்களவை தொகுதிகளுக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் கைரானா, மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா - கோண்டியா மற்றும் பால்கர், நாகாலாந்தில் ஒரு தொகுதி என மொத்தம் 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளது.
இன்று தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி மே 31-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர். #KairanaBypoll #Electioncommision
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X