search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேவி குப்பம்"

    கே.வி.குப்பம் அருகே வடமாநில வாலிபர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் அருகே கொசவன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கலாநாதன் (வயது 60). இவரது வீட்டின் கதவை நேற்று முன்தினம் நள்ளிரவில் சிலர் தட்டியுள்ளனர்.

    தூக்கத்தில் இருந்து எழுந்த கலாநாதன், கதவை தட்டுபவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    சிறிது நேரத்தில் அங்கு வந்த கலாநாதனின் உறவினர்கள் வீட்டின் முன்பு நின்றிருந்தவர்களை பார்த்து சத்தம் போட்டுள்ளனர். கூட்டமாக வருவதை பார்த்து 2 பேர் தப்பி ஓடினர். குஞ்சணன் மட்டும் சிக்கினார். பிடிபட்ட அவரை மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கலாநாதனின் உறவினர்கள் உடலை அருகில் இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

    இது தொடர்பான தகவல் கே.வி.குப்பம் போலீசாருக்கு நேற்று காலை தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று குஞ்சணன் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

    அவரை கட்டி வைத்து அடித்து கொலை செய்ததாக கலாநாதன் (60), முரளி (40), விஜயன் (58) ஆகியோரை கைது செய்தனர்.

    குஞ்சணன் பர்கூருக்கு வேலைக்கு வந்துள்ளார். வழிதவறி கொசவன் புதூருக்கு சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்ததால் திருடன் என நினைத்து தாக்கியுள்ளனர்.

    இதனால் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.

    ×