search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேபிள் ஆப்ரேட்டர்கள்"

    • அரசு கேபிள் ஆபரேட்டர்கள் தங்கள் கணக்கில் லாக் இன் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.
    • அரசு கேபிள் டி.வி., நிறுவனம், சந்தா தொகை செலுத்த ஆபரேட்டர்களுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது.

    திருப்பூர் :

    அரசு கேபிள் டி.வி., நிறுவனத்துக்கு மென் பொருள் வழங்கிய நிறுவனம் கடந்த நவம்பர் மாத இறுதியில் திடீரென சேவையை நிறுத்தியது. இதையடுத்து அரசு கேபிள் டி.வி., ஒளிபரப்பு ரத்தானது.கோர்ட்டு உத்தரவையடுத்து தடையின்றி கேபிள் டி.வி., ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம் அரசு கேபிள் ஆபரேட்டர்கள் தங்கள் கணக்கில் லாக் இன் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி., ஆபரேட்டர் 659 பேர் உள்ளனர். மொத்தம் 82 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. லாக்இன் பிரச்சினை காரணமாக புதிய இணைப்பு வழங்க முடியாமலும், பழுதடைந்த பாக்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு மாற்றிக் கொடுக்க முடியாமலும் ஆபரேட்டர்கள் தவிக்கின்றனர்.

    இது குறித்து அரசு கேபிள் ஆபரேட்டர்கள் கூறியதாவது:-  லாக்இன் பிரச்னையால் புதிய செட்டாப் பாக்ஸ்களை ஆக்டிவேட் செய்ய முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக புதிதாக அரசு கேபிள் இணைப்பு கேட்போருக்கு வழங்க முடியவில்லை. பழுதான செட்டாப் பாக்ஸ்களையும் மாற்ற முடியாததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைகின்றனர். தனியார் இணைப்புகளை நோக்கி நகர்கின்றனர்.

    50சதவீத சந்தாதாரர்கள், ஒளிபரப்பு ரத்தான பின்னரே மாதாந்திர சந்தா தொகை செலுத்துவது வழக்கம். தற்போது தொகை செலுத்தாதோரின் ஒளிபரப்பை ரத்து செய்யமுடிவதில்லை. ஒளிபரப்பு தொடர்வதால் சந்தா தொகை செலுத்த மேலும் இழுத்தடிக்கின்றனர். அரசு கேபிள் டி.வி., நிறுவனம், சந்தா தொகை செலுத்த ஆபரேட்டர்களுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது.

    வாடிக்கையாளர் பயன்படுத்தாத பாக்ஸ்களையும் செயலிழக்க செய்யமுடியவில்லை. பயன்பாட்டில் இல்லாத பாக்ஸ்களுக்கும் தொகை செலுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காணவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஒப்படைக்காத ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
    • முதல்கட்டமாக 17 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 659 அரசு கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் உள்ளனர். மொத்தம் 83 ஆயிரம் இணைப்புகளுக்கான செட்டாப்பாக்ஸ் வழங்கப்பட்டிருந்தது. அரசு கேபிள் டி.வி. படிப்படியாக வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. அவ்வகையில், மாவட்டத்தில் 73 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன.

    தமிழ்நாடு அரசு கேள்பிள் டிவி நிறுவனம், பயன்படுத்தாத செட்பாப் பாக்ஸ்களை ஒப்படைக்க ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. ஒப்படைக்காத ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் 183 ஆபரேட்டர்களிடம், செயல்படாத நிலையில் உள்ள 10 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்களை திரும்பப்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, முதல்கட்டமாக 17 ஆபரேட்டர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, அரசு கேபிள் டி.வி., நிறுவன தனி தாசில்தார் ரவீந்திரன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 183 ஆபரேட்டர்களிடம், சராசரியாக 10 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளன. முதல்கட்டமாக 17 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களிடமிருந்து 900 பாக்ஸ் திரும்ப பெறப்பட்டுள்ளன.

    அடுத்தடுத்து மற்ற ஆபரேட்டர்கள் மீது புகார் அளிக்கப்படும். பாக்ஸ்களை ஒப்படைக்காத பட்சத்தில், ஒரு பாக்ஸ் 1,726 ரூபாய் கணக்கிட்டு வசூலிக்கப்படுகிறது. உரிய அவகாசத்துக்குள் பாக்ஸ்களை ஒப்படைக்காதபட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை கடுமையாக்கப்படும். மாவட்டத்தில் 532 ஆபரேட்டர்கள் சந்தா தொகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×