search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடத்தில்"

    • சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இந்த ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 34 லட்சத்து16ஆயிரத்து177-க்கு விற்பனை ஆனது.

     பரமத்தி வேலூர்:

    சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரி கள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 18.36 1/2குவிண்டால் எடை கொண்ட 4ஆயிரத்து 973தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.24.65-க்கும், குறைந்த விலையாக ரூ.21.89-க்கும், சராசரி விலையாக ரூ.23.69-க்கும் என ரூ. 42ஆயிரத்து 869-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 321.72 1/2குவிண்டால் எடை கொண்ட 660மூட்டை தேங்காய் பருப்பு விற்ப னைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ85.06-க்கும், குறைந்த விலையாக ரூ81.16-க்கும் சராசரி விலையாக ரூ84.39-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.83.06-க்கும், குறைந்த விலையாக ரூ.67.29-க்கும், சராசரி விலையாக ரூ.79.99-க்கும் என ரூ.26லட்சத்து 10ஆயிரத்து 816-க்கு விற்பனை ஆனது.

    113.97 1/2 குவிண்டால் எடை கொண்ட 346 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் ஒரு கிலோ நிலக்கடலை காய் அதிக விலையாக ரூ.70 .20-க்கும், குறைந்த விலையாக ரூ.64.16-க்கும் சராசரி விலையாக ரூ.67 .30 -க்கும்என ரூ.7 லட்சத்து 62 ஆயிரத்து 492-க்கு விற்பனையானது. இந்த வாரம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 34 லட்சத்து16ஆயிரத்து177-க்கு விற்பனை ஆனது.

    சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.36.86 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

      பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 67.47 குவிண்டால் எடை கொண்ட 18ஆயிரத்து 310தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன.

    இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.27.80-க்கும், குறைந்த விலையாக ரூ.20.00-க்கும், சராசரி விலையாக ரூ.24.25-க்கும் என்று ரூ 1லட்சத்து 50ஆயிரத்து 636-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 201.68 1/2 குவிண்டால் எடை கொண்ட 443மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.85.15-க்கும், குறைந்த விலையாக ரூ.84.09-க்கும், சராசரி விலையாக ரூ.85.09-க்கும், இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.84.29-க்கும், குறைந்த விலையாக ரூ.70.99-க்கும், சராசரி விலையாக ரூ.83.15க்கும் என்று ரூ.16லட்சத்து 41ஆயிரத்து 952க்கு விற்பனை ஆனது.

    110.49குவிண்டால் எடை கொண்ட 148மூட்டை சிவப்புஎள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.114.99-க்கும், குறைந்த விலையாக ரூ96.69-க்கும், சராசரி விலையாக ரூ.111.11க்கும் என ரூ.11லட்சத்து 85ஆயிரத்து 504க்கு விற்பனையானது. அதேபோல்110.75 குவிண்டால் எடை கொண்ட 354 மூட்டை நிலக்கடலை காய் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    இதில் அதிகப்படி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.70.49க்கும், குறைந்த விலையாக ரூ 55 .09க்கும்,சராசரி விலையாக ரூ.64.21க்கும் என 354 மூட்டை நிலக்கடலை காய் ரூ.7லட்சத்து 8 ஆயிரத்து 87க்கு விற்பனை ஆனது. ஒட்டு மொத்தமாக இந்தவாரம் தேங்காய், தேங்காய் பருப்பு,எள், நிலக்கடலை காய் ஆகியவை ரூ.36லட்சத்து 86ஆயிரத்து179க்கு விற்பனை ஆனது.

    ×