search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை ஏசு"

    • 2 ஆலய மணிகளும் இன்று முதல் 22-ந்தேதி வரை 3 நாட்கள் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • 92 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பழமை மாறாமல் புத்தம் புதிதாக உள்ளது

    இரணியல் :

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, தோட்டி யோட்டில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலையில் அமைந்துள்ளது கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம்.

    உலகிலேயே புனிதராக அறி விக்கும் முன்பே சிறுமலர் தெரேசா வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை புனித தெரேசா ஆலயம் ஆகும்.

    இந்த ஆலயம் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி அன்றைய கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப்பட்டது. 1925-ம் ஆண்டு மே 17-ந்தேதி சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டார்.

    புனிதையின் (சிறுமலர் தெரேசா) உடன் பிறந்த 2 சகோதரிகளால் 1931-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. புனிதையின் பேர ருளிக்கம் (புனிதப்பண்டம்) ஆலயத்தில் உள்ளது. கண்டன் விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத்தில் உள்ள இந்த 2 ஆலய மணிகளும் இன்று (20-ந்தேதி) முதல் 22-ந்தேதி வரை 3 நாட்கள் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த 2 ஆலய மணிகளில் ஒன்றில் புனித தெரேசா உருவப்படமும், மற்றொன்றில் திருச்சிலுவையும் பொறிக் கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஆலய மணியில் "புனித தெரேசாவாகிய நான் இந்தியாவில் உள்ள அனைத்து பக்தர்களையும் கண்டன்விளைக்கு அழைப்பேன்" என ஆங்கிலத்தில் எழுதப் பட்டுள்ளது. கண்டன்விளை ஆலய மணி கோபுரத்தில் சுமார் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டி ருந்த இந்த 2 ஆலய மணிகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருப்பலி நாட்களில் ஒரு ஆலய மணியும், திருவிழா காலங்கள் மற்றும் சிறப்பு திருப்பலி வேளைகளில் 2 மணிகளும் ஒலிக்கப்படும்.தற்போது இந்த 2 ஆலய மணிகளும் பராமரிப்பு பணி களுக்காக கீழே இறக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க ஆலய மணிகள் என்பதால் இவற்றை பார்வையிட பங்குமக்கள் மட்டுமன்றி பல்வேறு தரப்பினர் விருப்பம் தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த 2 ஆலய மணிகளும் பக்தர்கள் பார்வைக்காக 3 நாட்கள் வைக்கப்படுகிறது. ஆலயம் மற்றும் ஆலய மணி குறித்த ஆய்வுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்தனர். இந்த 2 ஆலய மணிகளும் 92 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பழமை மாறாமல் புத்தம் புதிதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாலை மற்றும் மெழுகுவர்த்தியுடன் வந்து ஆலய மணியை பார்வையிட்டு வழிபட்டு செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை காரங்காடு வட்டார முதல்வரும், கண்டன்விளை பங்கு தந்தையுமான அருட்பணி சகாயஜஸ்டஸ், பங்குப்பேரவை துணை தலைவர் ஜெஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலாளர் லில்லிமலர் மற்றும் பங்கு இறைமக்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.

    • கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • 10-ம் நாள் விழாவில் காலை 11 மணிக்கும் திருத்தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    இரணியல் :

    கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி அப்போதைய ஆயர் அலோ சியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப்பட்டு திறக்கப் பட்டது. இந்த ஆலயத்தின் 100-வது ஆண்டு தொடக்க திருவிழா நேற்று திருக்கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக காலை முன்னோர் நினைவு சிறப்பு திருப்பலி, கல்லறை தோட் டம் மந்திரிப்பு, ஜெபமாலை, மலை சிற்றாலய குண மளிக்கும் திருப்பலி ஆகிய வை நடந்தது. பின்னர் மாலை புனிதையின் உருவம் பொறித்த திருக்கொடி பக்தர்கள் முன்னிலையில் பவனியாக எடுத்து வரப்பட்டது. குழித்துறை மறை மாவட்ட தொடர்பா ளர் பேரருட்பணி இயேசு ரெத்தினம், காரங்காடு வட்டார முதன்மை பணியா ளர் அருட்பணி சகாய ஜஸ்டஸ் ஆகியோர் முன்னி லையில், மார்த்தாண்டம் மறை மாவட்ட மேதகு ஆயர் டாக்டர் வின்சென்ட் மார்பவுலோஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் நூற்றாண்டு நினைவு கட்டிடம் திறப்பு, திருப்பலி, அன்பு விருந்து ஆகியவை நடந்தது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது. குழந்தை தெரே சாவின் பெயர் கொண்ட திருவிழாவான அக்டோபர் 1-ந்தேதி நாளை மாலை 6.45 மணிக்கு மேதகு ஆயர் அத்தனாசியுஸ் ரத்தினசாமி தலைமையில் மலர் சாற்று தல், நூற்றாண்டு நினைவு சின்னம் அர்ச்சிப்பு, திருப் பலி, தங்கத்தேர்ப்பவனி, அன்பின் விருந்தும் நடக்கி றது. 8-ம் நாள் விழாவில் காலை 11 மணிக்கு ஜெப மாலை, திருப்பலியும், 9-ம் நாள் விழாவில் இரவு 9.30 மணிக்கும், 10-ம் நாள் விழாவில் காலை 11 மணிக்கும் திருத்தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    • 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலிக்கிறது
    • இந்த ஆலயம் 100-வது ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது.

    கன்னியாகுமரி :

    உலகிலேயே புனிதராக அறிவிக்கும் முன்பே சிறுமலர் தெரேசாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை புனித தெரேசா ஆலயம்.

    இந்த ஆலயம் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்றைய கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப் பட்டது. 1925 மே 17-ல் சிறுமலர் தெரேசா புனித ராக அறிவிக்கப்பட்டார். புனிதையின் (சிறுமலர் தெரேசா) உடன் பிறந்த 2 சகோதரிகளால் 1931-ம் ஆண்டு கண்டன்விளை ஆலயத்திற்கு தரப்பட்ட 2 ஆலய மணிகள் இன்றும் தனது மணி ஓசையால் பக்தர்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. புனிதையின் பேரருளிக்கம் (புனிதப்பண்டம்) ஆலயத்தில் உள்ளது. வருகிற 2024 ஏப்ரல் மாதம் இந்த ஆலயம் 100-வது ஆண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது.

    இந்த நிலையில் கண்டன் விளை குழந்தை இயேசு வின் புனித தெரேசா ஆலயத்தில் 100 தொடர் ஜெபமாலை செய்து இறை வனுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நாளை (14-ந்தேதி) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

    நாளை காலை 7 மணி முதல் 15-ந்தேதி மாலை 7 மணி வரை நடக்கும் இந்த ஜெபமாலை ஜெபம் நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    ஜெபமாலை நிகழ்வை கண்டன்விளை கிளை பங்குகளான சித்தன் தோப்பு, பண்டாரவிளை, இரணியல் மற்றும் அன்பி யங்கள், சங்கங்கள், பக்தசபை இயக்கங்கள், திருத்தூது கழகங்கள், கண்டன்விளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு அருட்பணியாளர்கள் ஆகியோர் இணைந்து சிறப்பிக்கின்றனர்.

    தொடர் ஜெபமாலை முடிவில் 15-ந்தேதி மாலை 7 மணிக்கு காரங்காடு வட்டார முதல்வரும் கண்டன்விளை பங்கு தந்தையுமான அருட்பணி சகாயஜஸ்டஸ் தலைமை யில் திருப்பலி நடைபெறுகிறது

    ×