search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டன்விளை குழந்தை ஏசுவின் தெரேசா ஆலய திருவிழா
    X

    கண்டன்விளை குழந்தை ஏசுவின் தெரேசா ஆலய திருவிழா

    • கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • 10-ம் நாள் விழாவில் காலை 11 மணிக்கும் திருத்தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    இரணியல் :

    கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி அப்போதைய ஆயர் அலோ சியஸ் மரிய பென்சிகரால் அர்ச்சிக்கப்பட்டு திறக்கப் பட்டது. இந்த ஆலயத்தின் 100-வது ஆண்டு தொடக்க திருவிழா நேற்று திருக்கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக காலை முன்னோர் நினைவு சிறப்பு திருப்பலி, கல்லறை தோட் டம் மந்திரிப்பு, ஜெபமாலை, மலை சிற்றாலய குண மளிக்கும் திருப்பலி ஆகிய வை நடந்தது. பின்னர் மாலை புனிதையின் உருவம் பொறித்த திருக்கொடி பக்தர்கள் முன்னிலையில் பவனியாக எடுத்து வரப்பட்டது. குழித்துறை மறை மாவட்ட தொடர்பா ளர் பேரருட்பணி இயேசு ரெத்தினம், காரங்காடு வட்டார முதன்மை பணியா ளர் அருட்பணி சகாய ஜஸ்டஸ் ஆகியோர் முன்னி லையில், மார்த்தாண்டம் மறை மாவட்ட மேதகு ஆயர் டாக்டர் வின்சென்ட் மார்பவுலோஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் நூற்றாண்டு நினைவு கட்டிடம் திறப்பு, திருப்பலி, அன்பு விருந்து ஆகியவை நடந்தது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது. குழந்தை தெரே சாவின் பெயர் கொண்ட திருவிழாவான அக்டோபர் 1-ந்தேதி நாளை மாலை 6.45 மணிக்கு மேதகு ஆயர் அத்தனாசியுஸ் ரத்தினசாமி தலைமையில் மலர் சாற்று தல், நூற்றாண்டு நினைவு சின்னம் அர்ச்சிப்பு, திருப் பலி, தங்கத்தேர்ப்பவனி, அன்பின் விருந்தும் நடக்கி றது. 8-ம் நாள் விழாவில் காலை 11 மணிக்கு ஜெப மாலை, திருப்பலியும், 9-ம் நாள் விழாவில் இரவு 9.30 மணிக்கும், 10-ம் நாள் விழாவில் காலை 11 மணிக்கும் திருத்தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    Next Story
    ×