search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைகேட்பு"

    • வீடு, வீடாக சென்று குறைகேட்க முடிவு செய்துள்ளனர்.
    • கவுன்சிலர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்க லம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலை வர் ஆதவன்அதியமான், சுகாதார அலுவலர் சண் முகவேல் ஆகியோர் முன் னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்து ரைத்தனர்.

    சிறப்பு தீர்மானமாக திருமங்கலம் நகர் பகுதியில் மாதத்தில் 5 வார்டுகள் வீதம் வீடு தேடி சென்று குறைகளை தீர்க்கும் சிறப்பு முகாம்களை நடத்துவது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப் படுத்துதல், காய்ச்சல் குறித்து தினசரி நகரில் வீடு, வீடாக ஆய்வு செய்வது, பெண்களுக்கு மாதந் தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் சின்ன சாமி, வீரக்குமார், திருக்குமார், ஜஸ்டின் திரவி யம், பாண்டி, வினோத், காசிபாண்டி, பெல்ட்முரு கன், சரண்யாரவி, பாண்டி, முத்துக்காமாட்சி, ரம்ஜான் பேகம் சாலிகாஉல்பத், பவுசியா, அமுதா, ராஜகுரு, நகராட்சி மேலாளர் ரத்தின குமார், ஓவர்சீஸ் ராஜா, நகர அமைப்பு அலுவலர் சின்னா, சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன், வருவாய் ஆய்வாளர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல் ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் விவசாயி களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.
    • விவசாயிகளுக்கு வேளாண்மை துணை இயக்குநர் எடுத்துரைத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிக ளுக்கான குறைகேட்பு மற்றும் விவசா யிகள் மேம்பாட்டி ற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு வேளாண்மை அறிவியியல் நிலைய விஞ்ஞானி நட ராஜன் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் விவசாயி களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் தேசிய வேளாண்மை சந்தை திட்டம் குறித்து விவசாயி களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் நீர் மோலண்மை குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) ஜெயக்குமார் எடுத்துரைத்தார்.

    அதனை தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கை களை ஆய்வு செய்து உடனடி யாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். விவசாயிகள் இக்கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகள் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காணப்படும் எனவும், விவசாயிகள் வாய்க்கால் தூர் வாருதல் மற்றும் தடுப்பணை அமைப்பது தொடர்பாக தெரிவித்த கோரிக்கைகளுக்கு உரிய துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு நிதி ஆதாரத்தின் அடிப்படை யில் பணிகள் மேற்கொள்ள ப்படும் எனவும் தெரிவிக்க ப்பட்டது. புதுக்கூரைப்பேட்டை மற்றும் விஜயமாநகரம் கிராம விவசாயிகளுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் எனவும் தெரிவிக்க ப்பட்டது. விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான பதிலை சம்மந்த ப்பட்ட விவசாயிகளுக்கு அனுப்பி வைத்திட அறிவுரை வழங்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கண்ணையா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ரவிச்சந்திரன், வேளாண் உதவி இயக்குநர்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறைகளின் அரசு அலுவலர்கள் மற்றும் 14 வட்டார விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்துகொண்டனர்.

    ×