search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பப்பூ"

    • மதகுகள் வழியாக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • குமரி மாவட்டத்தில் கன்னிபூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னிபூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியும், பாசன குளத்தை நம்பியும் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னிபூ சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. கன்னிபூ சாகு படிக்காக ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று பேச்சிப்பாறை அணை திறக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டி ருந்தது. இதையடுத்து இன்று காலை பேச்சிப்பாறை அணையின் அடிவாரத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜ் அணையின் மதகுகளை திறந்து வைத்தார். கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதும் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. அந்த தண்ணீரில் பூக்கள் தூவப்பட்டது. அணையிலிருந்து இன்று 100 கன அடி தண்ணீர் வெளியிட்டப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் தோவாளை சானல் மற்றும் அனந்தனார் சானலில் திறந்து விடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 40.55 அடியாக இருந்தது. அணைக்கு 496 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து பெருஞ்சாணி அணையில் இருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று நிறுத்தப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 41.50 அடியாக உள்ளது. அணைக்கு 70 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. சிற்றாறு -1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு -2 அணையின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது.

    • தற்போது கும்ப பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அறுவடை நடந்து வருகிறது.
    • சானல்களில் சரியான அளவு தண்ணீர் கொடுக்கப்படாததால் விவசாயம் அழிந்து வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந் தது.

    கூட்டம் தொடங்கியதும் கலெக்டர் ஸ்ரீதர் முதலா வதாக பொறுப்பேற்று முதல் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளார் என்பதால் விவசாயிகள் அவருக்கு பொன்னாடை போர்த்தி அவரை வரவேற்றனர்.இதை தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. விவசாயி களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.

    கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது கும்ப பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அறுவடை நடந்து வருகிறது.ஒரு சில இடங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே மார்ச் 30-ந்தேதி வரை பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்யூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை ஆய்வு செய்து விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனந்தனார் சானலில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சானல்களில் சரியான அளவு தண்ணீர் கொடுக்கப்படாததால் விவசாயம் அழிந்து வருகிறது. தெங்கம்புதூர் பகுதிகளில் விலை நிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாறி வருகிறது.

    எனவே விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை வழங்கி விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் இருந்து மாணவ-மாணவிகள் வேளாண் படிப்பு படிக்க வேண்டும் என்றால் வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.அதற்கு ஏற்கனவே 105 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. தற்பொழுது பாலமோர் எஸ்டேட் பகுதியில் 195 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. அந்த பகுதியில் விவசாய கல்லூரி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி னார்கள்.

    கலெக்டர் ஸ்ரீதர் கூறிய தாவது:-

    சானலில் தற்பொழுது ஷிப்டு முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.அனந்தனார் சானலில் கழிவுகளை கொட்டாமல் இருக்க அறிவிப்பு பலகை கள் வைக்க நடவ டிக்கை எடுக்கப்படும். விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் கல்லூரி அமைப் பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பி ரியா, கூட்டுறவு இணைப்பதி வாளர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

    • அணை யின் நேரடி தண்ணீர் பாசனத்தை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுகிறார்கள்
    • தோவாளை சேனல், அனந்தனார் சேனல் உள்பட அனைத்து சேனல்களிலும் ஷிப்டு முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி விவசாயி கள் சாகுபடி செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசனக் குளங் கள் உள்ளது. மேலும் அணை யின் நேரடி தண்ணீர் பாசனத்தை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுகிறார்கள். தற்பொழுது மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு இருந்தனர்.

    தேரூர், சுசீந்திரம், அருமநல்லூர், பூதப்பாண்டி, தக்கலை, குலசேகரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டரில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். விவசாயிகளுக்கு பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து தங்கு தடை இன்றி தண்ணீர் வழங் கப்பட்டு வருகிறது.

    தோவாளை சேனல், அனந்தனார் சேனல் உள்பட அனைத்து சேனல்களிலும் ஷிப்டு முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தங்கு தடை இன்றி வழங் கப்பட்டது. இந்த நிலை யில் தேரூர், சுசீந்திரம் பகுதியில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதையடுத்து அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது.

    சுசீந்திரம், தேரூர் பகுதி களில் அறுவடை எந்திரம் மூலமாக அறுவடை பணி நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெற்களை உடனடியாக விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள். டிராக்டர் மூலமாக கொண்டு செல் லப்படும் நெற்கள் கோட் டார் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட் டத்தை பொறுத்த மட்டில் இன்று காலை 42.36 அடியாக உள்ளது.அணைக்கு 797 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 731 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.55 அடியாக உள்ளது. அணைக்கு 41 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணை யில் இருந்து 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    பேச்சிபாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து 1121 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    ×