search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பகோணம் கொள்ளை"

    கும்பகோணத்தில் ரேசன் கடை பெண் ஊழியரிடம் 5 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் வட்டி பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் கபீர்தாசன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (வயது 45). இவர் ரே‌ஷன் கடை ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சாந்தி, தனது மகனை கும்பகோணம் பஸ் நிலையத்திற்கு அழைப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்

    அப்போது மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து சாந்தியை வழிமறித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து சாந்தி கும்பகோணம் தாலுகா போலீஸ் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×