search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டேரிப்பள்ளம் அணை"

    • வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டி உள்ளது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக அதிகரித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தின் அணைப்பகுதிகளான பவானிசாகர், குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், கொடிவேரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் வரட்டு பள்ளம், கல்லு பள்ளம், கும்பரவாணி பள்ளம் ஆகிய பள்ளங்கள் வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டி உள்ளது. அணையிலிருந்து 50 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் டி.என். பாளையம் அருகே கொங்கர் பாளையம் வனப்பகுதியை ஒட்டி குண்டேரிபள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 41.75 அடி யாகும். நேற்று முன்தினம் குண்டேரி பள்ளம் அணைப்பகுதியில் 101 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக நேற்று முன்தினம் 32 அடியாக இருந்த குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று இரவும் குண்டேரிபள்ளம் அணை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் கொண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து இன்று 37.34 அடியாக உயர்ந்துள்ளது.

    இதேபோல் ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 443 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பவானிசாகர் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
    • அணை நிரம்பி உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில் குன்றி மலையடி வாரத்தில் 42 அடி உயரத்தில் கடந்த 1980-ம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.

    இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம், உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீர் 10-க்கும் மேற்பட்ட காட்டாற்று பள்ளங்கள் வழியாக தண்ணீர் வந்தடைகிறது.

    இந்த அணையில் உள்ள இரு பாசன வாய்க்கால்கள் மூலமாக குண்டேரிப்பள்ளம், வினோ பாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான குன்றி, கம்பனூர், விளாங்கோம்பை, கல்லூத்து ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக குண்டேரிபள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணை நிரம்பி தண்ணீர் நிரம்பிய நிலையில் தற்போது கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைந்து வறட்சியாக காணப்பட்டது.

    இந்நிலையில் நள்ளிரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக காலை 6 மணி நிலவரப்படி 151 கன அடி தண்ணீர் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடைந்தது.

    அணையின் முழு கொள்ளளவு 41.75 அடியாகும். ஆனால் அணையின் நீர்மட்ட 42 அடியை எட்டி தண்ணீர் ஆர்பரித்து வெளியேறி வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் மழையளவு 96.மி.மீட்டர் பதிவாகியுள்ள நிலையில், அணை நிரம்பியதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து 151 கன அடி நீரானது அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் வினோபாநகர் வழியாக கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர் பகுதிகளில் உள்ள 2தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் சென்று கலக்கிறது.

    தொடர்ந்து கனமழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து அதிகமாகும் பட்சத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று இரவு வினோபாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் அடித்த சூறாவளி காற்றால் மக்காச்சோளம் பயிர்கள் சாய்ந்து சேதமானது.

    • குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து வந்தது.
    • இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து நிரம்பியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில் குன்றி மலையடி வாரத்தில் 42 அடி உயரத்தில் கடந்த 1980-ம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.

    இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம், உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீரானது 10-க்கும் மேற்பட்ட காட்டாற்று பள்ளங்கள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வந்தடைகிறது.

    இந்த அணையில் உள்ள இரு பாசன வாய்க்கால்கள் மூலமாக குண்டேரி ப்பள்ளம், வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்நிலையில் குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து வந்தது. மேலும் குண்டேரிப்பள்ளம் பகுதியில் மழையின் அளவு 75.20 மி.மீ மழை பெய்து உள்ளது.

    நேற்று காலை அணையின் நீர்மட்டம் 39 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து 30 கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில் மாலை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இரவு அணைக்கு நீர் வரத்து படிப்படியாக 2ஆயிரத்து 600 கன அடியாக அதிகரி த்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து நிரம்பியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி குண்டேரி ப்பள்ளம் அணைக்கு நீர்வரத்தானது 1,759 கனஅடியாக இருந்தது. உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படுவதால் ஆற்றின் வழியோரங்களில் உள்ள குண்டேரிப்பள்ளம், கொங்கர்பாளையம், வினோபாநகர், வாணிப்புத்தூர், இந்திரா நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    அதே நேரத்தில் குண்டேரிப்பள்ளம் அணையை சுற்றி உள்ள கிராம மக்கள் ஆபத்தை உணராமல் அணையில் இருந்து வெளியேறும் மீன்களை போட்டி போட்டுக்கொண்டு பிடித்து வருகின்றனர். பொதுப்ப ணித்துறை ஊழியர்கள் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் எச்சரிக்கை விடுத்தும் அதை கண்டு கொள்ளாமல் மீன் பிடித்து வருகின்றனர்.

    அணையில் இருந்து பெரிய அளவிலான காய்ந்த மரங்கள் காட்டாற்றில் அடித்து வரப்படும் நிலையில் மீன் பிடிக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அணை நிரம்பி வெள்ள நீர் வெளியேறும் காலங்களில் மீன் பிடிப்பதை பொதுப்பணித்துறையினர் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் டி.என்.பாளையம் அருகே உள்ள பெருமுகை ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவில் 15 அடி உயரத்தில் அமைந்துள்ளது சஞ்சீவராயன் குளம். நீர்பிடிப்பு பகுதிகளான கரும்பாறை, தொட்டகோம்பை உள்ளிட்ட வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இதனால் 10 அடியாக இருந்த சஞ்சீவராயன் குளத்தின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று அதிகாலை குளத்திற்கு வரும் 500 கன அடி உபரி நீர் முழுமையாக வெளியேறியது. தற்போது உபரிநீர் படிப்படியாக குறைந்து வருகிறது.

    இன்றும் மழை பெய்தால் நீர்வரத்து அதிகமாகும் என்பதால் இந்த குளத்தை சுற்றியுள்ள கிராமங்களான கள்ளிப்பட்டி, கணக்க ம்பாளையம், பகவதிநகர், வளையபாளையம், சைபன் புதூர், எரங்காட்டூர், சின்ன காளியூர், காளியூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 101.54 அடியாக உள்ளது.நேற்று அணைக்கு வினாடிக்கு 2,115 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்து 5844 கனஅடியாக நீர் வரத்து வருகிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1500 கன அடி என மொத்தம் 1,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் 33.50 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது. இந்த அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    மற்றொரு பிரதான அணையான பெரும்பள்ளம் அணை 22.97 அடியில் உள்ளது.தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×