search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்லாடம்பட்டி"

    • வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • கண்மாய்கள் நிரம்புகின்றன.

    வாடிப்பட்டி

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இதனால் வாடிப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்ததால் நிரம்பத் தொடங்கின. வாடிப்பட்டி அருகே குட்லா டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாடக நாச்சி புரத்தில் மீனாம்மாள் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு குட்லாடம்பட்டி தாடக நாச்சி அருவியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஓடை வழியாக வந்து நிரம்பும்.

    அங்கு தேக்கி வைக்கப் பட்ட தண்ணீர் பின்னர் மதகுகள் வழியாக விளை நிலங்களுக்கு நீர் பாசனத் திற்கு பயன்படுத்தப்படும். கண்மாய் நிரம்பிய பின் மாறுகால் ஏற்பட்டால் ஓடை வழியாக அப்புசெட்டி கண்மாய்க்கு சென்று அங்கு நீர் நிரப்பப்பட்டு அதன் பின் நாகர் குளம் கண்மாய், செம்மினிபட்டி புதுக்குளம், கொட்டமடக்கி கண்மாய்கள் நிரம்பும். அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் தாதம்பட்டி கண்மாய் சென்று அங்கிருந்து பெரியார் பாசன கால்வா யில் கிழக்கு பகுதியில் உள்ள துருத்தி ஓடை வழியாக சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு சென்று சேரும்.

    இந்த நிலையில் குட்லாடம் பட்டி மீனாம்மாள் கண்மாய் கரையில் மதகின் அருகில் அரிப்பு ஏற்பட தொடங் கியது. அது கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கரையை அரித்து சரிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள தென்னந் தோப்பு களில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் அங்குள்ள ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தடுப்ப ணைகள் நிரம்பி அப்பு செட்டி கண்மாய்க்கு தண்ணீர் சென்றது. பின்னர் நாகர்குளம் கண்மாய் நிரம்பி செம்மினிபட்டி புதுக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் சென்றது.

    இதுகுறித்த தகவலறிந்த கச்சைகட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி, குட்லாம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரவன், கச்சைகட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெகதீசன், கிராம உதவியாளர்கள் ஜெயக்குமார், பாலு அந்தப் பகுதியை பார்வையிட்டனர். பின்னர் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    ×