search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்டையில் மூழ்கி"

    • சம்பவத்தன்று சாந்தாமணி விஜயமங்கலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள நடுப்பட்டி, புலவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சாந்தாமணி (வயது 55). பழனிச்சாமி கடந்த 40 வருடங்களாக விஜயமங்கலம் அருகே உள்ள கள்ளியம் புதூரில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் சாந்தாமணிக்கு அடிக்கடி முழங்கால், மூட்டு வலி இருந்துள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவத்தன்று சாந்தாமணி விஜயமங்கலம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் மதியம் விஜயமங்கலம் பகுதியில் உள்ள மொடவாண்டி குட்டையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது.

    இதனையடுத்து அங்கு வந்த பழனிச்சாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடலை மேலே எடுத்துப் பார்த்தபோது அது இறந்து போன தனது மனைவி சாந்தாமணி என தெரிய வந்தது.

    பின்னர் சாந்தாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பிரபு தனது நண்பர்களுடன் கண்ணேரி மடுவு நீரோடை குட்டையில் குளிக்க சென்றுள்ளார்.
    • குட்டையில் குளித்து கொண்டிருந்தபோது சுழலில் சிக்கி மூச்சுத்திணறி நண்பர்கள் கண் முன்னே பரிதாபமாக இறந்து விட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அணைக்கரடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (30). இவர் பி.எஸ்.என்.எல். காண்ட்ராக்ட் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    பிரபு தனது நண்பர்களான ராஜா, சின்னசாமி ஆகியோருடன் சம்பவத்தன்று அரேபாளையம், வனப்பகுதியில் உள்ள கண்ணேரி மடுவு நீரோடை குட்டையில் குளிக்க சென்றுள்ளார்.

    குட்டையில் குளித்து கொண்டிருந்தபோது சுழலில் சிக்கி மூச்சுத்திணறி நண்பர்கள் கண் முன்னே பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து பிரபுவின் தாய் சின்னபொண்ணு அளித்த புகாரின்பேரில் ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×