search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் குழாய் உடைந்தது"

    • சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வீணானது.
    • மரத்தின் வேரை ஜே.சி.பி எந்திரம் மூலம் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையினை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக காரமடையில் சாலையின் இருபுறமும் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் இருந்த மரத்தின் வேரை ஜே.சி.பி எந்திரம் மூலம் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சாலையோரம் இருந்த மரத்தின் வேரை அகற்றும் போது அருகில் இருந்த கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் சென்றது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக தண்ணீர் வெளியேற்றத்தை நிறுத்தினர்.

    ×