என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » a water pipe broke
நீங்கள் தேடியது "A water pipe broke"
- சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வீணானது.
- மரத்தின் வேரை ஜே.சி.பி எந்திரம் மூலம் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையினை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக காரமடையில் சாலையின் இருபுறமும் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் இருந்த மரத்தின் வேரை ஜே.சி.பி எந்திரம் மூலம் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சாலையோரம் இருந்த மரத்தின் வேரை அகற்றும் போது அருகில் இருந்த கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் சென்றது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக தண்ணீர் வெளியேற்றத்தை நிறுத்தினர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X