search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியாஸ் சிலிண்டர் திருடிய"

    • கோவிந்தனை கையும் களவுமாக பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
    • போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே ஊமரெட்டியூர் மாரியம்மன் கோவில் பின்புறம் வசிப்பவர் ரேவதி வயது (50).

    இவர் சம்பவத்தன்று இரவு வீட்டு வராண்டாவில் சமையல் செய்து விட்டு கியாஸ் சிலிண்டரையும், அடுப்பையும் அப்படியே விட்டு விட்டு இரவு தூங்கச்சென்று விட்டார்.

    பின்னர் காலை எழுந்து வெளியே சமையல் செய்வதற்காக வந்து பார்த்தபொழுது சிலிண்டரும், அடுப்பும் காணவில்லை. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் ரேவதி புகார் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் ரேவதியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் லைலா என்பவர் கியாஸ் சிலிண்டரும், அடுப்பும் எனது வீட்டில் இருக்கிறது.

    இதனை எனது வீட்டிற்கு அடிக்கடி வரும் ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தை சேர்ந்த கோவிந்தன் (21) என்பவர் இங்கு வைத்து விட்டு சென்றுள்ளார் என ரேவதியிடம் லைலா கூறியுள்ளார்.

    உடனடியாக கோவிந்தனை லைலா தனது வீட்டுக்கு வரும்படி நைசாக பேசி வரவழைத்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த கோவிந்தனை கையும் களவுமாக பிடித்து லைலாவும், ரேவதியும் அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் கோவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    ×