என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்"
- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை.
- ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:
கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று கூட்டப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை. ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை.
- ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந்தேதி நடைபெறும் நிலையில் ஏப்ரல் 11-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதனால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை. ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
- இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது என தகவல்
- தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் பங்கேற்பு.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. இந்த கூட்டத்தில் கர்நாடகா கோரிக்கையை ஏற்று மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த கூட்டம் இரண்டு முறை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், இன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில், தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்