என் மலர்
நீங்கள் தேடியது "காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்"
- தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய காவிரி நீர் தொடர்பாக முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது.
- தமிழ்நாட்டுக்கு 31.24 டி.எம்.சி நீரை கர்நாடகா விடுவிக்க வேண்டும்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) 41வது கூட்டம் வரும் ஜூன் 27ம் தேதகி அன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய காவிரி நீர் தொடர்பாக முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டம், காவிரி பாசனப் பகுதிகளில் நீர் பகிர்வு மற்றும் மேலாண்மை தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முக்கியமானது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நீர் பகிர்வு குறித்து தொடர்ந்து நிலவும் முரண்பாடுகளை கருத்தில் கொண்டு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஜூலை மாதத்திற்கு தமிழ்நாட்டுக்கு 31.24 டி.எம்.சி (தொடர் மில்லியன் கன அடி) நீரை கர்நாடகா விடுவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை.
- ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந்தேதி நடைபெறும் நிலையில் ஏப்ரல் 11-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதனால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் என கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை. ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை.
- ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:
கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று கூட்டப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை. ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
- தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் பங்கேற்றனர்.
- தற்போது வரை 4 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், மீதமுள்ள நீரையும் திறக்க வேண்டும் என வலியுறுத்தல்.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35வது கூட்டம், ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூடியது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் பங்கேற்றனர்.
அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நவம்பர் மாதத்திற்கான 15.79 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை 4 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், மீதமுள்ள நீரையும் திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் நீர் திறக்கப்பட்டதால், நீர் திறக்க உத்தரவிடக் கூடாது என கர்நாடக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
- இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது என தகவல்
- தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் பங்கேற்பு.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. இந்த கூட்டத்தில் கர்நாடகா கோரிக்கையை ஏற்று மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த கூட்டம் இரண்டு முறை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், இன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில், தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.






