search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்பந்தாட்டம்"

    • லயனல் மெஸ்ஸி சமீபத்தில்தான் இன்டர் மியாமி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்
    • இறுதி ஆட்டம் டென்னிசி மாநில ஜியோடிஸ் பூங்காவில் நடைபெற்றது

    அமெரிக்க கால்பந்தாட்டத்தில் பிரபலமானது லீக்ஸ் கோப்பை போட்டிகள்.

    இந்த கோப்பைக்கான இறுதி ஆட்டம் அமெரிக்காவின் டென்னிசி மாநில ஜியோடிஸ் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், நாஷ்வில் எஸ்சி (Nashville SC) அணி, இன்டர் மியாமி அணியோடு மோதியது.

    உலகப்புகழ் பெற்ற அர்ஜென்டினாவின் வீரரான லயனல் மெஸ்ஸி, சமீபத்தில் இன்டர் மியாமி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    எனவே இந்த போட்டிகளை உலகெங்குமிலுள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் கண்டு வந்தனர்.

    ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே மெஸ்ஸி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டித்தொடரில் மெஸ்ஸி 10 கோல்களை போட்டார்.

    அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 1-1 என்ற செட் கணக்கில் கோல் அடித்து சமன் செய்தன.

    எனவே போட்டியின் வெற்றி பெனால்டியை வைத்து முடிவு செய்யப்பட்டது.

    பெனால்டிகளில் 10க்கு 9 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

    • இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் தென்காசி மாவட்ட அளவிலான ஜவர் கால்பந்தாட்ட போட்டி நடைப்பெற்றது.
    • போட்டியில் மொத்தம் 25 அணியினர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவிலான ஜவர் கால்பந்தாட்ட போட்டி நடைப்பெற்றது. இதில் மொத்தம் 25 அணியினர் கலந்து கொண்டனர்.

    இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியின் இயக்குநரும், தென்காசி நகரின் கால்பந்தாட்ட தலைவருமான இசக்கித்துரை முன்னிலை வகித்தார். போட்டியில் முதல் பரிசை ஆலங்குளம் மரடோனா அணியினரும், 2-வது பரிசை ஆறுமுகம்பட்டி அணியினரும், 3-வது பரிசை தென்காசி புட்பால் கிளப் மற்றும் ரெட்டியார்பட்டி சிவந்தி ஆதித்தனார் அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பள்ளி முதல்வர் மோனிகா டீ சோசா மற்றும் தென்காசி கால்பந்தாட்ட செயலாளர் பிஸ்வாஸ் ஆகியோர் வழங்கினர்.

    ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் பாலமுருகன், ஸ்டீபன் தங்கராஜ், ரவிஅருண், சோபியா, மகாலெட்சுமி, வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×