என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காசநோய் கண்டறியும் முகாம்"
- வாழப்பாடி அருகே மேற்கு ராஜாபாளையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
- இம்முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேற்கு ராஜாபாளையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார்.ஆரியபாளையம் வட்டார
மருத்துவ அலுவலர் சம்பத்கு மார் தலைமையில், காசநோய் மேற்பார்வையாளர்கள் விஜயசாரதி, அன்பழகன், நம்பிக்கை மைய பணியா ளர்கள் லட்சுமணன், வித்யா, அகிலா, சுஜிதா நிதிஷ்குமார் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர், நடமாடும் எக்ஸ்-ரே பரிசோதனை இயந்திரத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு காசநோய் பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பேபி பாக்யராஜ், உறுப்பினர்கள் ஜெயராமன், வீரமுத்து, அங்கமுத்து, செந்தில்குமார், வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது.
- உறுப்பினரும் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செங்குட்டுவன் முகாமினை தொடங்கி வைத்தார்.
காவேரிப்பட்டணம்.
காவேரிப்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது. இதனை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செங்குட்டுவன் முகாமினை தொடங்கி வைத்தார்.
பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை வகித்தார்.
முகாமினை வட்டார மருத்துவ அலுவலர்கள் தாமரைச் செல்வி, சோமசுந்தரம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள், சுகாதார மேற்பார்வை யாளர் செந்தில்குமரன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பிரபு, காசநோய் சிகிச்சை பிரிவு சிவரஞ்சனி ஆகியோர் பணியாளர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை களை வழங்கினர். பணியாளர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு அப்போதே அதன் முடிவினை தெரிவித்து மருத்துவ குழுவினர் மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் நித்தியா, கீதா, தமிழ்ச்செல்வி, கோகுல்ராஜ், அமுதா, வருண், பாரதிராஜா, சிவப்பிரகாசம், மாருதி முருகன், முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்