search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளத்தனமாக மது விற்பனை"

    • கள்ள மதுபானங்களும் விற்பனை செய்யப்படுவதாக பாதிக்கப்படும் மற்றும் அடிமையாகி உள்ள குடிமகன்கள் தெரிவிக்கின்றனர்.
    • கிராமப்புற மக்களின் வாழ்வாதரத்தை சீர்குலைக்கும் வகையில் இரவு, பகல் என எந்நேரமும் நடைபெற்று வருகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலையம் மற்றும் தொப்பூர் காவல் நிலையம் அதன் எல்லைக்குட்பட்ட இடங்களில் அதிகளவு கிராமப் பகுதிகளாகவே உள்ளன. இந்த இரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் 200-க்கும் மேற்பட்ட சந்துக்கடைகளும் செயல்பட்டு வந்தன.

    இந்நிலையில் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக பதிவேற்ற பின்பு அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த 73 சந்து கடைகள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது கிராம பகுதியில் சந்து கடைகள் மற்றும் கள்ளமதுபானம் இல்லாத பகுதியாக மாற்றிவிட்டார்.

    இந்நிலையில் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளில் சர்வ சாதாரணமா சந்து கடைகள் காலை முதல் இரவு முழுவதும் செயல்பட்டு வருகிறது.

    தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மானியதஹள்ளி, உம்மியம்பட்டி, சனி சந்தை உள்ளிட்ட மூன்று இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வந்தாலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கிராமங்களில் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது.

    மேலும் அதிகாலை நேரங்களிலேயே விற்பனை செய்யப்படுவதால் கிராம பகுதியில் கூலி வேலைக்கு செல்பவர்கள் விவசாய பணியில் மேற்கொள்ளபவர்கள் அனைவரும் காலை நேரத்திலேயே மதுவை வாங்கி குடிக்க தொடங்கி மதுபானத்திற்கு அடிமையாகி விடுவதால் பணிக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு காலையிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு மாறியுள்ளனர்.

    மேலும் அதியமான் கோட்டை மற்றும் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு சில சந்து கடைகளில் மட்டும் அரசு மதுபான கடைகளில் விற்பனைக்கே வராத புதிய பெயர்களுடன் கள்ள மதுபானங்களும் விற்பனை செய்யப்படுவதாக பாதிக்கப்படும் மற்றும் அடிமையாகி உள்ள குடிமகன்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனால்தான் அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சந்து கடைகளுக்கு மூடு விழா நடத்தப்பட்டுள்ளதாகவும் மதுபிரியர்கள் கூறுகின்றனர்.

    தமிழக அரசு கள்ளச்சாராயம் மற்றும் கள்ள மதுபானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இது போன்ற செயல்களும் தருமபுரி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட காவல் நிலைய எல்லைகளில் தொடர்ந்து கிராமப்புற மக்களின் வாழ்வாதரத்தை சீர்குலைக்கும் வகையில் இரவு, பகல் என எந்நேரமும் நடைபெற்று வருகிறது. இவை தடுக்கப்படுமா முற்றிலும் ஒழிக்கப்படுமா என்பது பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சிதம்பரம் நகரில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதனர்.
    • போலீசார் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே திடீர் சோதனை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் அரசு மதுபானக்கடை மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் நகர சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், லெட்சுமிராமன் மற்றும் தனிப்படை போலீசார் ெரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சிதம்பரம் ெரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை சேர்ந்த கவுஸ்பாஷா (வயது 50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கள்ளத்தனமாக விற்பனைக்கு வைத்திருந்த 75 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதனையடுத்து சிதம்பரம் பஸ் நிலையம் டாஸ்மாக் கடை அருகே சிதம்பரம் கள்ளுகடைசந்தைச் சேர்ந்த தியாகராஜன் (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 45 மதுபாட்டில்களையும், அதே பகுதியில் சிதம்பரம் எம்.கே. தோட்டம் ராஜா (38) என்பவரை கைது செய்து அவரிடமிருத்து 68 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சிதம்பரம் நகர போலீசார் மொத்தம் 188 மதுப்பாட்டில் களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ×