search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Counterfeit sale of liquor"

    • சிதம்பரம் நகரில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதனர்.
    • போலீசார் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே திடீர் சோதனை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் அரசு மதுபானக்கடை மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் நகர சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், லெட்சுமிராமன் மற்றும் தனிப்படை போலீசார் ெரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சிதம்பரம் ெரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை சேர்ந்த கவுஸ்பாஷா (வயது 50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கள்ளத்தனமாக விற்பனைக்கு வைத்திருந்த 75 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதனையடுத்து சிதம்பரம் பஸ் நிலையம் டாஸ்மாக் கடை அருகே சிதம்பரம் கள்ளுகடைசந்தைச் சேர்ந்த தியாகராஜன் (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 45 மதுபாட்டில்களையும், அதே பகுதியில் சிதம்பரம் எம்.கே. தோட்டம் ராஜா (38) என்பவரை கைது செய்து அவரிடமிருத்து 68 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சிதம்பரம் நகர போலீசார் மொத்தம் 188 மதுப்பாட்டில் களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ×