search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வித்திருவிழா"

    • நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வித்திருவிழா நடந்தது.
    • விருதுநகரில் நடைபெறும் கல்வித்திருவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாடார் மஹாஜன சங்கம் சார்பில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவி களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசளிப்பு விழா நடந்தது.

    இதில் கலெக்டர் விஷ்ணு சந்திரன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி,உட்பட அலுவலர்க ளும்,அரசியல் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கு நாடார் மகாஜன சங்க மாவட்ட செயலாளர் மூத்த பத்திரிக்கையாளர் குகன் தலைமை வகித்தார்.பட்டிமன்ற புகழ் அவனி மாடசாமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுத்தொகை மற்றும் வெற்றிச்சான்றிதழ் வழங்கினார்.

    அமைச்சர் மற்றும் கலெக்டர் ஆகியோர் காமராஜரின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கை குறித்து விளக்கி பேசினர்.இப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் இன்று விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

    அவர்களுக்கு காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை விருதுநகரில் நடைபெறும் கல்வித்திருவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில் 120 பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமை யை வெளிப்படுத்தினர்.அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம் லயன்ஸ் கிளப் தலைவர் லயன் இளங்கோவன்,லயன் பாலகிருஷ்ணன்,லயன் சக்திவேல்,ரெட் கிராஸ் சங்க மாவட்ட தலைவர் அப்பா மெடிக்கல் டாக்டர் சுந்தரம்,என்.எம்.எஸ்.சேர்மத்தாய் வாசன் கல்லூரி தலைவர் மோகன், துணைத்தலைவர் ராமு, என்.எம்.எஸ். முன்னாள் துணைத் தலைவர்கள் பெரிய கருப்பன்,களரி ஜெயக்குமார், தட்சிணாமூர்த்தி, பரமக்குடி சரவணமுத்து, மயில் நேச மூர்த்தி, சாயல்குடி கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை மணிகண்டன், ஜெய முருகன், நாடார் மஹாஜன சங்க மகளிரணி நிர்வாகிகள் கீழக்கரை பாப்பா, பாண்டியூர் பரமேஸ்வரி, தேன்மொழி,ராமநாதபுரம் நகர் நாடார் உறவின் முறை தலைவர் வேலுச்சாமி, அன்னை சிவகாமி மகளிர் நற்பணி மன்றத்தலைவி ராஜேஸ்வரி,செயலாளர் கோவிந்தம்மாள், இளை ஞரணி நிர்வாகிகள் அரசடி வண்டல் ஜெகந்நாதன், கடம்பூர் தர்மா, தி.மு.க 20-வது வார்டு செயலாளர் மருதுபாண்டி,சேதுநகர் உதயமூர்த்தி, ரெட்டையூரணி ஆனந்த்,தாமரைக்குளம் சோமு,தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் நற்றமிழ் செல்வன்,நகர் மன்ற உறுப்பினர் குமார், கீழக்கரை சாந்தக்குமார் மற்றும் நாடார் உறவின் முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×