search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு"

    • பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆழ்துளை கிணறுகளை பராமரித்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட 15 கிராம ஊராட்சி களில் செயல்படு த்தப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டம், 15-வது நிதிக்குழு மான்ய திட்டம்,

    சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும்

    பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளி ட்ட திட்டங்களின் கோப்பு கள் மற்றும் அலுவலக நடைமுறை மற்றும் பகிர்மானம் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அலுவலக பதிவறை மற்றும் கணினி பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நிலுவைக் கோப்புகளை உடனடியாக முடித்திடவும் மற்றும் தற்போது கோடை காலம் தொடங்கி யுள்ளதால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்தி டும் வகையில் ஆழ்துளை கிணறுகளை முழுமையாக பராமரித்திடு மாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை சுற்றியுள்ள சுற்றுப்புற ங்களை தூய்மை யாக வைத்திருக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன், நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெருமாள், சுபா, உட்படதுறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்த னர்.

    • கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 2019-2021-ம் ஆண்டி ற்கான ஆண்டுத்தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்த ஆய்வில் 2019-2023-ம் ஆண்டிற்கான தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, வழக்கு பதிவேடு, நீண்டகால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடு களை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஒவ்வொரு இருக்கைக்கு உரிய கோப்புகள், முன்கொணர் பதிவேட்டின் படியம் மற்றும் நில அளவைத்துறையில் உள்ள அளவீட்டு நிலுவை இனங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து, குடிமைப்பொருள், சமூக பாதுகாப்பு திட்டம், கோட்டகலால், நில அளவை பிரிவு, ஆதார் சேவை மையம், பதிவறை, கோட்ட புள்ளியியல் பிரிவுகளை தணிக்கை செய்தார்.

    மேலும், ஓராண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நில சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி, அலுவலக மேலாளர் (பொது) பூபதி, தாசில்தார்கள் கார்த்தி, ரவிசங்கர் (கலால்) (பொ), வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகேயன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அலுவலக பதிவறை மற்றும் கணினி பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நிலுவைக் கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    மேலும், இந்த ஆய்வில் எலவமலை, கதிரம்பட்டி, கூரபாளையம், மேட்டுநாசுவம் பாளையம், பேரோடு மற்றும் பிச்சாண்டம் பாளையம் ஆகிய 6 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதிதிட்டம், 15-வது நிதிக்குழு மான்ய திட்டம், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கோப்புகள் மற்றும் அலுவலக நடைமுறை மற்றும் பகிர்மானம் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அலுவலக பதிவறை மற்றும் கணினி பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நிலுவைக் கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) லதா, உட்பட துறைசார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×