search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Krishnanunny"

    • பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆழ்துளை கிணறுகளை பராமரித்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட 15 கிராம ஊராட்சி களில் செயல்படு த்தப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டம், 15-வது நிதிக்குழு மான்ய திட்டம்,

    சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும்

    பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளி ட்ட திட்டங்களின் கோப்பு கள் மற்றும் அலுவலக நடைமுறை மற்றும் பகிர்மானம் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அலுவலக பதிவறை மற்றும் கணினி பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நிலுவைக் கோப்புகளை உடனடியாக முடித்திடவும் மற்றும் தற்போது கோடை காலம் தொடங்கி யுள்ளதால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்தி டும் வகையில் ஆழ்துளை கிணறுகளை முழுமையாக பராமரித்திடு மாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை சுற்றியுள்ள சுற்றுப்புற ங்களை தூய்மை யாக வைத்திருக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன், நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெருமாள், சுபா, உட்படதுறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்த னர்.

    ×