search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
    X

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு

    • ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அலுவலக பதிவறை மற்றும் கணினி பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நிலுவைக் கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    மேலும், இந்த ஆய்வில் எலவமலை, கதிரம்பட்டி, கூரபாளையம், மேட்டுநாசுவம் பாளையம், பேரோடு மற்றும் பிச்சாண்டம் பாளையம் ஆகிய 6 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதிதிட்டம், 15-வது நிதிக்குழு மான்ய திட்டம், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கோப்புகள் மற்றும் அலுவலக நடைமுறை மற்றும் பகிர்மானம் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அலுவலக பதிவறை மற்றும் கணினி பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நிலுவைக் கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) லதா, உட்பட துறைசார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×