search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்து கொள்ளவேண்டும்"

    • மாவீரன் தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.
    • சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வரலாற்றையும், அவருடைய பெருமைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் மாநில தலைவர் கொங்கு வி.கே.முருகேசன், மாநில பொதுச்செயலாளர் கொங்கு எம்.ராஜாமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 217-ம் ஆண்டு நினைவு தினம் கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் நாளை (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் மாவீரன் தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் காங்கயம் ரோடு காயத்ரி மகாலில் நாளை காலை 8 மணி முதல் 10 மணிவரை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி இன்றைய இளம் தலைமுறையினர், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வரலாற்றையும், அவருடைய பெருமைகளையும் அறிந்து கொள்ளும் நோக்கில் திருப்பூரில் கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் கட்சியின் கவுரவ தலைவர் சரண்யா கே.எம்.முருகேசன், துணைத் தலைவர் சிலீக் என்.எம்.ராமசாமி, பொருளாளர் ஜியோ ஏ.என்.செல்வராஜ் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×