search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரூர் தொகுதி"

    • நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 54 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர்.

    கரூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி தொடங்கி 27-ந் தேதியுடன் நிறைவடைந்தது. 28-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. 29-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாக இருந்தது. இதனையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிக்கு 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அதிக வேட்பாளர் போட்டியிடும் தொகுதியாக கரூரும், மிக குறைந்த வாக்காளர்கள் போட்டியிடும் தொகுதியாக நாகப்பட்டினமும் உள்ளன.

    கரூரில் போட்டியிடுவதற்காக மொத்தம் 62 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதனையடுத்து வேட்பு மனு பரிசீலனையின்போது 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 56 பேர் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வேட்பு மனு திரும்பப் பெறும் நாளில் 2 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 54 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர்.

    இதனால் கரூர் தொகுதி தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றுளது. வாக்குப்பதிவின் போது தமிழகத்தின் மற்ற பாராளுமன்ற தொகுதியை விட கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கரூர் தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ளது குறுப்பிடத்தக்கது.

    தமிழகத்திலேயே மிக குறைவாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    ×