search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தாளா்"

    • அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களும் அடிப்படை மொழித்திறன் பெற வேண்டும்.
    • திருப்பூரில் உள்ள 14 ஒன்றியங்களில் இருந்தும் 82 கருத்தாளா்கள் பங்கேற்கின்றனா்.

    திருப்பூர் :

    எண்ணும் எழுத்தும் கருத்தாளா்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் திருப்பூரில் தொடங்கியது. தமிழகத்தில் 1 முதல் 3 ம் வகுப்பு வரையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களும் அடிப்படை மொழித்திறன் பெற வேண்டும் என்பதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் கடந்த 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் வரும் 2023-24 ம் கல்வியாண்டு முதல் 4 மற்றும் 5 ஆம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூா் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், திருப்பூா் பள்ளி கல்வித் துறை ஆகியன இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் திட்ட கருத்தாளா்களுக்கான பயிற்சி முகாம் கே.எஸ்.சி.மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இதில், முதல் நாளில் கணிதம் மற்றும் அறிவியல் பாட கருத்தாளா்களுக்கு பயிற்சி நடைபெற்றது. ஆங்கில பாட கருத்தாளா்களுக்கான பயிற்சி வெள்ளிக்கிழமையும், தமிழ், சமூக அறிவியல் பாட கருத்தாளா்களுக்கான பயிற்சி சனிக்கிழமையும் நடைபெறுகிறது.

    பயிற்சியை திருப்பூா் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் வீ.சங்கா் தொடங்கிவைத்தாா். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அமுதா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். இதில் ஒவ்வொரு பாடத்துக்கும் திருப்பூரில் உள்ள 14 ஒன்றியங்களில் இருந்தும் 82 கருத்தாளா்கள் பங்கேற்கின்றனா். இதைத்தொடா்ந்து, ஜூன் முதல் வாரத்தில் ஒன்றிய அளவிலான கருத்தாளா்களுக்கான பயிற்சி நடைபெறவுள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள 4 மற்றும் 5 ம் வகுப்பு எண்ணும் எழுத்தும் ஆசிரியா்கள் பங்கேற்கவுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×