search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டலேறு அணை"

    • கண்டலேறு அணையில் இருந்து முதலில் 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • தண்ணீர் 3-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்ட்டுக்கும், மறுநாள் பூண்டி ஏரிக்கும் சென்றடைந்தது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 1-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 3-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்ட்டுக்கும், மறுநாள் பூண்டி ஏரிக்கும் சென்றடைந்தது.

    கண்டலேறு அணையில் இருந்து முதலில் 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் பூண்டி ஏரிக்கு முதலில் வினாடிக்கு 20 கனஅடி வீதம் வந்தது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 300 கன அடிவீதம் வந்தடைந்தது.

    இந்நிலையில் ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு தற்போது கிருஷ்ணா தண்ணீரை எடுத்து வருகின்றனர். இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 215 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அட. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 26.26 அடியாக பதிவானது. 1.027 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    ×