search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணினி மயம்"

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
    • மாநிலங்களின், தேவைக்கேற்ப கணினிம யமாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மை கொண்ட இந்த மென்பொருள் வட்டார மொழியில் இருக்கும்.

    மதுரை

    தேசிய கூட்டுறவு பயிற்சி நிறுவன நிதி இயக்குநர் டாக்டர் கோபால்சாமி, ஆர்.கே.22 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே.வி.கே.ஆர்.பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் சமூக பொரு ளாதார வளர்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் மற்றும் இடு பொருட்கள் வழங்குவதன் மூலம் விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதில் இந்த சங்கங்கள் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் 3 அடுக்கு நிர்வாக அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதன்படி மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட அளவில் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமிய அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் சுமார் 13 கோடி விவசாயிகள் உறுப்பி னர்களாக உள்ளனர். மற்ற 2 அடுக்குகள் அதாவது மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் ஏற்கனவே நபார்டு வங்கி மூலம் தானியங்கப்படுத்தப்பட்டு, பொது வங்கி மென்பொருள் இயக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இருப்பினும், பெரும்பா லான சங்கங்கள் இதுவரை முழுமையான முறையில் கணினிமயமாக்கப்பட வில்லை. இதனால் தற்கால சூழ்நிலைக்கேற்றவாறு வேகமான, துல்லியமான, திறமையான, நம்பிக்கை யான மற்றும் வெளிப்படையான உறுப்பினர் சேவைகள் புரிவதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது. சில மாநிலங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தனித்த மற்றும் பகுதியளவு கணினிமயமாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மத்திய கூட்டுறவு அமைச்சகம் அகில இந்திய அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டுவரும் நோக்கத்து டனும் இக்கடன் சங்கங்களை முழுமையாக கணினிமயமாக்கும் திட்டத்தினை சமீபத்தில் அறிவித்துள்ளது.

    இக்கணினிமயமாக்கல் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நிதிச் சேர்க்கை, விவசாயிகளுக்கு சிறு மற்றும் குறு விவசாயி களுக்கு சேவையை வலுப்படுத்துதல் மற்றும் உரங்கள், விதைகள், போன்ற இடு பொருட்கள் வழங்குவது ஆகியன உட்பட்ட முக்கிய சேவை மையங்களாக மாற இந்தத் திட்டம் உதவும்.

    மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கிகள் இத்தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு அரசாங்க திட்டங்களை (கடன்) மற்றும் மானியம் சம்பந்தப்பட்ட இனங்கள்) முன்னெடுப்பதற்கான முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    இது கடன்களை விரைவாகச் செலுத்துதல், குறைந்த மாற்றச் செலவு, விரைவான தணிக்கை மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்துதல் மற்றும் கணக்கீடு ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகளைக் உறுதி செய்யும்.

    இணைய பாதுகாப்பு மற்றும் தரவு சேமிப்பகம் அடைப்படையிலான ஒரே மாதிரியான மென்பொருளை உருவாக்கு தல், சங்கங்களுக்கு கணினி மென்பொருள் ஆதரவை வழங்குதல், பராமரிப்பு ஆதரவு மற்றும் பயிற்சி உட்பட ஏற்கனவே உள்ள பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும். மாநிலங்களின், தேவைக்கேற்ப கணினிம யமாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மை கொண்ட இந்த மென்பொருள் வட்டார மொழியில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரேசன் கடைகளில் இ.சேவை மையங்களை நடத்த இயலாது: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் அறிவித்தூர்.
    • கடந்த 2010-ம் ஆண்டு, அரசு ஊழியர்களுக்கு இணையாக விகிதாச்சார அடிப்படையில் அகவிலைப்படியை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்க உத்தரவிட்டார்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ரேசன் கடை ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சலுகை, உரிமை வழங்க கடந்த 15 ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு, அரசு ஊழியர்களுக்கு இணையாக விகிதாச்சார அடிப்படையில் அகவிலைப்படியை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்க உத்தரவிட்டார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த அகவிலைப்படி பெற்று வந்தனர்.

    கொரோனா காலத்தில் ரேசன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. தலைமை அலுவலக முற்றுகை உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியது.

    கடந்த ஜூன் 7,8 மற்றும் 9ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள ரேசன் கடை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 90 சதவீத பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். ஜூன் 10ம் தேதி 7 அம்ச கோரிக்கையுடன் காத்திருப்பு போராட்டடம் நடத்தினோம். அன்று முத-அமைச்சரை சந்திக்க இயலவில்லை.

    தலைமை செயலகத்தில் மனு அளிக்கப்பட்டது. போராட்டத்தின் காரணமாக, முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு நியாயமான கோரிக்கையை பரிசீலனை செய்து, ரேசன் கடை ஊழியர்களுக்கு 28 சதவீத அகவிலைப்படி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    அரசு பணியாளர்களில் மிகவும் பலவீனமான பகுதியினர் என சத்துணவு, துப்புரவு பணியாளர்கள் என 5 லட்சம் பேர் உள்ளனர். அத்தகைய ஊழியர்கள் எல்லா அரசு பணியாளர்கள் போல் வசதி வாய்ப்புகளுடன் வாழ்வது கிடையாது.

    அத்தகைய பணியாளர்கள் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கு விரும்பாத பொருட்களை தலையில் கட்டும் சூழல் இருப்பதால் சில சிக்கல்கள் வருகிறது. மக்களின் விருப்பத்தை ஆண்டு தோறும் கேட்டு, வழங்கினால் பிரச்னைகள் வராது. கருவிழி திரை மூலம் பொருட்கள் வழங்கும் முறைக்கு வரவேற்கிறோம். நுாறு சதவீத கணினி மயமாக்கம் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டது.

    கணினி மயமாக்கத்தில் மில்லில் இருந்து பொருட்கள் குடோனுக்கும், குடோனில் இருந்து ரேசன் கடைக்கு வரும் வரை ஆய்வு செய்வதிற்கான வாய்ப்பே இல்லாத நிலை உள்ளது. தவறுகள் தொடங்கும் இடத்தில் ஆய்வு செய்தால், ஒட்டுமொத்தமாக தவறில்லாத நிர்வாகம் நடக்கும்.

    கணினி மயமாக்கத்தில் சில குறைகள் உள்ளது. எல்லா கடைகளிலும் மோடம் இல்லை. பழைய பி.ஓ.எஸ்., மிஷின்கள் உள்ளது. தரமான பி.ஓ.எஸ்., மிஷின்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவர் துரை.சேகர், அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர்சிவக்குமார், மாநில பொருளாளர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×