என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கணவர் சாவு"
- சம்பவத்தன்று வீட்டில் மனைவியிடம் குடிக்க பணம் கேட்டதால் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனவிரத்தியடைந்த பெரியசாமி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது40). மேஸ்திரி வேலை செய்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் மனைவியிடம் குடிக்க பணம் கேட்டதால் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவிரத்தியடைந்த பெரியசாமி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாகேஸ்வரன் (வயது 42). இவருக்கு ரஞ்சிதம் மலர் (38) என்ற மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
- மது குடிக்கும் பழக்கம் உள்ள நாகேஸ்வரன், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை காமராஜர் காலனி சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வந்தவர் நாகேஸ்வரன் (வயது 42).
இவருக்கு ரஞ்சிதம் மலர் (38) என்ற மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள நாகேஸ்வரன், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
புத்தாண்டு அன்றும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகேஸ்வரன் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்