என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுகுடிக்க மனைவி பணம் தராததால்விஷம் குடித்த கணவர் சாவு
- சம்பவத்தன்று வீட்டில் மனைவியிடம் குடிக்க பணம் கேட்டதால் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனவிரத்தியடைந்த பெரியசாமி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது40). மேஸ்திரி வேலை செய்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் மனைவியிடம் குடிக்க பணம் கேட்டதால் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவிரத்தியடைந்த பெரியசாமி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story