search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் நீர்மட்டம் தாழ்வு"

    • படகு போக்குவரத்து தாமதம்
    • காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து படகு போக்குவரத்துதொடங்கியது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. பவுர்ணமி நாளான நேற்று கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இன்று 2-வது நாளாகவும் காலையில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றும் படகு போக்குவரத்து காலை 8 மணிக்கு தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து படகு போக்குவரத்துதொடங்கியது.

    • படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது
    • குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இன்று காலை 2-வது நாளாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துஉள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

    அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகு நேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது.

    இத னால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற் றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் காலை 10மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.இதைத்தொடர்ந்து2மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    இதற்கிடையில் கன்னியா குமரி, சின்னமுட்டம், வாவத் துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்த ளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    ×