search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு
    X

    கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு

    • படகு போக்குவரத்து தாமதம்
    • காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து படகு போக்குவரத்துதொடங்கியது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. பவுர்ணமி நாளான நேற்று கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இன்று 2-வது நாளாகவும் காலையில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றும் படகு போக்குவரத்து காலை 8 மணிக்கு தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து படகு போக்குவரத்துதொடங்கியது.

    Next Story
    ×