search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சன்ஜங்கா சிகரம்"

    கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறி உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் உடல்களை மீட்ட மீட்பு குழுவினர் உடலை மலை முகாமில் வைத்துள்ளனர்.
    காத்மாண்டு:

    இந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் குழுவினர் ஏறி வருகின்றனர். இந்தநிலையில் சிகரத்தில் ஏறிய இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் பிணமாக கிடந்தனர்.

    அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு மலை முகாமில் வைத்தனர். பின்னர் காத்மாண்டுவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு 2 பேரின் உடல்களும் ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கப்பட்டது. கடும் குளிர் ஏற்பட்டதாலும், உடலில் வெப்பம் குறைந்ததாலும் 2 பேரும் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
    நேபாள நாட்டில் உள்ள கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறிய இந்தியர்கள் பிப்லாப் பால்தியா, குண்டால் கரார் ஆகியோர் உடல்நலம் பாதிப்பால் இறந்தனர்.
    காத்மாண்டு:

    உலகின் 3-வது மிக உயர்ந்த சிகரம் என்ற பெருமையை கொண்டது நேபாள நாட்டில் உள்ள கஞ்சன்ஜங்கா. 8 ஆயிரத்து 586 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் ஏறி வருகின்றனர்.

    அந்தவகையில் 4 இந்தியர்கள், ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் என 5 பேர் கொண்ட குழு கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறியது. கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டனர். எனினும் அவர்களில் பிப்லாப் பால்தியா (வயது 48) சிகரத்தை தொட்டார். மற்றவர்கள் பாதி வழியிலேயே நின்று விட்டனர்.

    பின்னர் அனைவரும் கீழே இறங்கி வரும் போது அதில் பிப்லாப் பால்தியா, குண்டால் கரார் (46) ஆகியோர் உடல்நலம் பாதிப்பால் இறந்தனர். மற்ற 3 பேரும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் முகாமுக்கு திரும்பினர்.

    இதனிடையே மற்றொரு குழுவில் இருந்த சிலி நாட்டை சேர்ந்தவர் கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறிய போது மாயமானார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
    ×