search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்கா ஸ்நானம்"

    • பாரத் கவுரவ் எனப்படும் தீபாவளி சுற்றுலா ரெயிலில் காசிக்கு செல்ல விருப்பமுள்ள பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கங்கை நதியில் புனித நீராடுதலுடன் தொடங்கும் இந்த சுற்றுலா ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி தரிசனத்தோடு நிறைவடையும்.

    திண்டுக்கல்:

    தென்காசியில் இருந்து நவம்பர் 9-ந் தேதி புறப்படும் பாரத் கவுரவ் எனப்படும் தீபாவளி சுற்றுலா ரெயிலில் காசிக்கு செல்ல விருப்பமுள்ள பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல பொதுமேலாளர் ராஜலிங்கம் பாசு திண்டுக்கல்லில் தெரிவித்ததாவது:-

    இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலா பயணிகளுக்காக பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரெயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை என்ற பெயரில் தென்காசியில் இருந்து நவம்பர் 9-ந் தேதி இந்த சுற்றுலா பயணம் தொடங்குகிறது.

    தீபாவளியன்று காசியில் உள்ள கங்கை நதியில் புனித நீராடுதலுடன் தொடங்கும் இந்த சுற்றுலா ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி தரிசனத்தோடு நிறைவடையும். இந்த ரெயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 8 படுக்கை வசதி பெட்டிகள், ஒரு பேட்டரிகார், 2 பவர் கார்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறுகிறது.

    தென்காசியில் புறப்படும் இந்த ரெயில் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, காசி, அலகாபாத், கயா வழியாக செல்லும்

    நவம்பர் 16-ந் தேதி ராமேஸ்வரம் வந்து பின்னர் 17-ந் தேதி தென்காசி வந்தடையும். பயண கட்டணமாக படுக்கை வசதிக்கு ரூ.16,850ம், மூன்றடுக்கு ஏசி வகுப்புகளுக்கு ரூ.30,500ம் வசூலிக்கப்படுகிறது.

    சுற்றுலா பகுதிகளை பார்வையிட பஸ் போக்குவரத்து, தென்னிந்திய சைவ உணவுகள், சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர், பயண காப்புறுதி, ஏசி மற்றும் ஏசி வசதி இல்லாத தங்கும் இடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

    மேலும் மத்திய மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் பயணித்தால் எல்.டி.சி. சான்றிதழ் வழங்கப்படும். மொத்தமுள்ள 600 இருக்கைகளில் இதுவரை 300க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. எனவே பயணிகள் விரைந்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளி என்பது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய பண்டிகை.
    • சூரியன் மறையும் வேளையில் புத்தம் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலம் தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

    நரக உபாதைகளிலிருந்தும் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்று எண்ணுபவர்கள், நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்கிறது பாத்ம புராணம்.

    இதன்படி தீபாவளிப் பண்டிகை தினத்தன்று அதிகாலை (சுமார் 4.30 மணிக்கு முன்பாக) அனைவரும் உடல் முழுவதும் சுத்தமான நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். காலை எழுந்திருந்து பல் தேய்த்து விட்டு, சாமி சன்னதியில் கோலம் போட்ட ஆஸனத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு, பாட்டி, தாயார், மாமியார், அக்கா முதலிய வயதான சுமங்கலிப் பெண்கள் மூலம் தலையில் நன்கு காய்ச்சிய நல்லெண்ணெய் வைக்கச் சொல்லி, உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு நாயுருவிக் கொடியால் தலையை மூன்று தடவை சுற்றி வாசலில் எறிந்துவிட்டு, இலைகள் போட்டு கொதிக்க வைக்கப்பட்ட வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு பெரியோர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து தரச்சொல்லி அவர்களை வணங்கி புதிய ஆடைகள் (ஆடைகள்) பெற்றுக் கொண்டு, அவற்றை உடுத்திக்கொண்டு, விபூதி குங்குமம் நெற்றியில் இட்டுக்கொண்டு, சிறிதளவு பட்டாசு கொளுத்த வேண்டும்.

    இடையிடையே இனிப்புகள் சாப்பிட்டு, உறவினர்களின் ஆசிபெற்று அனைவருடனும் ஒன்று சேர்ந்து பூஜைகள் செய்தல் வேண்டும். நாளை நேரம் கிடைக்கும்போது ஆலயம் சென்று வர வேண்டும். மதியம் சாப்பிட்டு விட்டு மாலையில் மகாலட்சுமி பூஜை செய்து, தீபங்கள் வரிசை வரிசையாக நிறைய ஏற்றி வைத்தல் வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    தீபாவளி என்பது அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய பண்டிகை. இதை சாஸ்திரப்படி அனுஷ்டித்தால் இந்த சந்தோஷம் வருஷம் முழுவதும் நீடிக்கும்.

    தீபாவளி நாளுக்கு சாஸ்திரங்களில் தரித்ரத்தைப் போக்கடிக்கும் நாள் என்று பெயர். அதாவது சாஸ்திரத்தில் நாயுருவிக்கொடிக்கு ஏழ்மையைப் போக்கடிக்கும் சக்தியும், விரோதிகளை விலக்கும் சக்தியும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    நாயுருவிக் கொடி அல்லது தும்பீம் எனப்படும் சுரைக்காய் கொடியை, நீராடல் செய்யும்போது தலையை மூன்று முறை சுற்றி தூக்கி எறிய வேண்டும். இதனால் நரக பயமும், நரகத்துக்கு நிகரான துக்கமும், நம்மை விட்டு விலகும்.

    யம தர்ப்பணம்

    தீபாவளியன்று யமதர்மராஜாவுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தீபாவளியன்று காலை புனித நீராடல் செய்து முடித்து விட்டு காலை 7 மணிக்குள் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஆஸ்வயுஜ கிருஷ்ண சதுர்தசீ புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே என்று ஆரம்பிக்கும் 14 நாமாக்களைச் சொல்லி மஞ்சள் கலந்த அட்சதையால் தண்ணீர் விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். பித்ருதர்ப்பணம் போல் எள்ளு சேர்த்தல், தந்தை இருப்பவர்கள் தந்தை இல்லாதவர்கள் அனைவருமே இதைச் செய்ய வேண்டும்.

    மாலை தீபம் ஏற்றுங்கள்

    தீபாவளியன்று மாலை உங்கள் வீட்டிலும் அருகிலுள்ள சிவன், விஷ்ணு அம்பிகை ஆலயங்களிலும் நான்கு திரியுள்ள எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். சதுர்தசியில் நான்கு திரியுடன் கூடிய தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். ஆகவே பாவங்களை போக்கடித்து நரக பயத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நரக பயம் வராது. எப்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

    மகாலட்சுமி பூஜை

    சூரியன் மறையும் வேளையில் புத்தம் புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலம் தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். நெய் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்ய வேண்டும். மேலும் கணக்கு எழுதப்பயன்படுத்தப்படும் பேனா பென்சில் முதலியவற்றையும் ஓர் தாம்பாளத்தில் வைத்து அவற்றில் காளியையும், அத்துடன் கணக்குகள் எழுதப்பயன்படுத்தப்படும் நோட்டுகளில் சரஸ்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து இந்திரனையும், குபேரனையும் பூஜை செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கல், பால் நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும்.

    ×