search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரு அடார் லவ்"

    ஒரு அடார் லவ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான பிரியா வாரியர், உண்மையை பேசினால் சிலருக்கு பிரச்சினை என்று கூறியிருக்கிறார். #PriyaVarrier
    ஓமர் லுலு இயக்கத்தில் ரோ‌ஷன், பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஒரு அடார் லவ்’. இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகர்கள் அனைவருமே பிரியா வாரியரின் கண் சிமிட்டலுக்கு ரசிகர்களானார்கள். இதனால் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் காதலர் தினத்தன்று வெளியானது. ஆனால் மிக மோசமான விமர்சனங்களை பெற்று, படுதோல்வியை சந்தித்தது.

    இதனை தொடர்ந்து படக்குழுவினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். முதலில் தனக்குத்தான் முக்கியத்துவம் இருந்தது என்றும், பிரியா வாரியரின் வீடியோ பிரபலமானதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றிவிட்டனர் என்று நூரின் ஷெரீப் தெரிவித்தார்.



    அதன்பின் இயக்குநர் ஓமர் லுலு அளித்துள்ள தொலைக்காட்சி பேட்டியில், ’அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனவுடன் தயாரிப்பாளர் பிரியா வாரியரை பிரதானமாக வைத்து படத்தை எடுக்க சொன்னார். இதனால் கதை மாறியது’ என்றார். இந்த வி‌ஷயம் குறித்து பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதில், ’நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலருக்குப் பிரச்சினை வரும். ஏன் அவர்களைப் போல இருக்க வேண்டும்? நான் அமைதியாக இருக்கிறேன். ஏனென்றால் என்ன ஆனாலும் கர்மா பார்த்துக் கொள்ளும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.
    ஒமர் லூலு இயக்கிய `ஒரு அடார் லவ்' படத்தில் இணைந்து நடித்த பிரியா வாரியர் - நூரின் ஷெரீப் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. #OruAdaarLove #PriyaVarrier #NoorinSherif
    ஒரு அடார் லவ் படத்தில் கண் சிமிட்டியும் இந்திய அளவில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த கண்சிமிட்டலுக்காகவே படம் ஓடும் என்று பேசினர். ஆனால் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

    இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஓமர் லூலு கூறும்போது, “நூரின் ஷெரீப் திறமையான நடிகை. அவருக்கு முன்னுரிமை அளித்து கதையை உருவாக்கி இருந்தேன். ஆனால் பிரியா வாரியர் கண்சிமிட்டல் பாடல் வைரலானதும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் பிரியாவாரியரை முதன்மையான கதாபாத்திரமாக்கி கதையை மாற்றினேன்” என்றார்.



    நடிகை நூரின் ஷெரீப் கூறும்போது, “படத்தில் எனக்குத்தான் முதன்மையான கதாபாத்திரம் என்று சொல்லி படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால் பிரியா வாரியர் கண்சிமிட்டலால் கதையை மாற்றி அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னை ஓரம் கட்டி துணை நடிகையாக்கிவிட்டனர். இது வருத்தமாய் இருந்தது.” என்றார்.

    இதனால் பிரியா வாரியருக்கும், நூரின் ஷெரீப்புக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. நூரின் ஷெரீப்புக்கு பதில் அளித்துள்ள பிரியா வாரியர், “கதையை எனக்காக மாற்றியதாக குற்றம்சாட்டுகின்றனர். கண்சிமிட்டல் பாடலுக்கு பிறகு எனக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் கதையை மாற்றியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்துவிட்டதாக நூரின் ஷெரீப் குறை கூறி உள்ளார். அவரை படத்தில் ஓரம்கட்டவில்லை. முதலில் சொன்ன கதையைத் தான் அப்படியே படமாக்கி இருந்தனர்” என்றார். #OruAdaarLove #PriyaVarrier #NoorinSherif

    ஒரு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒரு அடார் லவ் இயக்குனர், படம் தோல்வியடைந்தது குறித்து காரணம் கூறியுள்ளார். #OruAdaarLove
    ஒரு அடார் லவ் படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் ஒமர் ஒரு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அவரும் படத்தில் நடித்த மற்றொரு நடிகையான நூரின் ஷெரிப்பும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஒமர், 

    “இந்தப் படத்தை தொடங்கும் போது ரோ‌ஷனும், பிரியாவும் கதையைப் பற்றி ஏதும் அறியாதவர்களாக இருந்தனர். எனக்கும் அது தான் தேவையானதாக இருந்தது. திடீரென அவர்களுக்கு கிடைத்த பிரபலம் நடிகர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தியது. பிரியாவும், ரோ‌ஷனும் கதையை மாற்ற முற்பட்டனர். பலரும் அவர்களுக்கு அறிவுரை கூறியபோதும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை” என்று கூறினார். 



    பிரியா காட்சிகளை மாற்றியதால் நூரின் பங்குபெறும் காட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். அவர் ஏற்படுத்திய மாற்றம் தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று ஒமர் கூறியுள்ளார்.
    ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியர் மீது அந்த படத்தின் இயக்குநர் ஒமர் லூலு புகார் கூறியுள்ளார். #OruAdaarLove #PriyaVarrier #OmarLulu
    ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்த படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்தது பிரபலமானதை அடுத்து அவரது புகழ் கூடியது. சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார்.

    இந்த படத்தில் முதலில் நூரின் ஷெரீப் தான் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். பிரியா வாரியர் கண்ணடித்து நடித்தது பிரபலம் ஆனதால் நூரினை துணை கதாபாத்திரமாக்கி பிரியாவை முதன்மை கதாநாயகியாக மாற்றினார்கள்.

    ஒரு அடார் லவ் படம் கடந்த மாதம் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பிரியா வாரியர் மீது அந்த படத்தின் டைரக்டர் ஓமர் லூலு புகார் கூறி உள்ளார்.



    அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ’இந்த படத்தின் ஒரிஜினல் பதிப்பில் பிரியாவாரியர் கதாநாயகி கிடையாது. அவர் கண்ணடித்தது பிரபலம் ஆனதால், தயாரிப்பாளர் என்னை அணுகி பிரியா வாரியரை கதாநாயகியாக வருவது போல் கதையை மாற்றி எழுதும்படி கூறினார்.

    நூரின் ஷெரிப் தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பிறகு அவரது கதாபாத்திரம் துணை கதாபாத்திரமாக்கப்பட்டது. படத்தினால் புகழ் கிடைத்த பின்னர் பிரியாவாரியர் பட புரமோ‌ஷன் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.

    பட ரிலீசுக்கு பிறகு நடந்த படத்தை பிரபலபடுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. அது சரியில்லை. எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது’ என்றார். #OruAdaarLove #PriyaVarrier #OmarLulu

    ஒமர் லூலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரகூப் - நூரின் ஷெரிப் - பிரியா வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒரு அடார் லவ்' படத்தின் விமர்சனம். #OruAdaarLove #OruAdaarLoveReview #Roshan #PriyaVarrier
    பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கும், நூரின் ஷெரிப்புக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், அதே பள்ளியில் சேரும் பிரியா வாரியரை பார்க்கும் ரோஷனுக்கு அவள் மீது காதல் ஏற்டுகிறது.

    ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ரோஷன், நூரின் ஷெரிப்புடன் தோழமையாக பழகுவது பிரியா வாரியருக்கு பிடிக்காமல் போக, இருவருக்கும் இடையே விரிசல் ஏற்டுகிறது. பிரியா வாரியருடன் மீண்டும் இணைய நினைக்கும் ரோஷன், நூரின் ஷெரிப்புடன் நெருக்கமாக பழகுவது போல நடிக்கிறார். ஒரு கட்டத்தில் ரோஷன் - நூரின் ஷெரிப் இடையே நெருக்கம் அதிகமாகி காதலாகிறது.



    கடைசியில், ரோஷன் யாருடன் இணைந்தார்? யார் காதல் வெற்றி பெற்றது? என்பதே படத்தின் மீதி காதல் கதை.

    காதல் காட்சிகளில் ரோஷன், பிரியா வாரியர் இளைஞர்களை கவர்கின்றனர். இருப்பினும் இரண்டாவது பாதியில், அனைவரையும் கவர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன்வசமாக்குகிறார் நூரின் ஷெரிப். மற்றபடி அனீஷ் ஜி மோகன், தில்ருபா, மிச்செல் அல் டேனியல், ரோஷ்னா அன் ராய் என மற்ற கதாபாத்திரங்களும் ரசிக்கும்படி நடித்துள்ளார்கள்.



    பள்ளிப்பருவத்தில் நடக்கும் காதலை, இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார் ஒமர் லூலு. இளைஞர்கள் தனது பள்ளி, கல்லூரி காலங்களில் யாரிடமும் பகிர முடியாமல் இருக்கும் ரகசியங்கள் பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறார்கள். எனவே இளைஞர்களை கவரும் ஒரு படமாக இருக்கும். குறிப்பாக தமிழில் வசனங்கள் சரியான இடத்தில் இடம்பெற்றிருப்பது மிகச் சிறப்பான ஒன்று. நூரின் ஷெிப்பின் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

    ஷான் ரஹ்மான் இசையில் மாணிக்க மலராய பூவே பாடல் ஹிட்டடித்த நிலையில், மற்ற பாடல்களும் ரசிக்கும்படியாகவே உள்ளது. சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `ஒரு அடார் லவ்' இளமைக் காதலின் இனிமை. #OruAdaarLove #OruAdaarLoveReview #Roshan #PriyaVarrier #NoorinSherif 

    கண்ணடித்து புகழ் பெற்ற பிரியா வாரியர், பெற்றோர்கள் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்தனர் என்று கூறியிருக்கிறார். #PriyaVarrier #OruAdaarLove
    கண்ணடித்து புகழ் பெற்ற பிரியா வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. காதல் காமெடி கதையான இந்த படம் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் பிரியா வாரியர் அளித்த பேட்டியில் ‘கண்ணடிக்கும் காட்சி மூலம் பிரபலம் அடைந்ததும் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் பயந்தார்கள். எல்லாமே எனக்கும் என் குடும்பத்துக்கும் புதிதாகத்தான் இருந்தது.



    மொபைல் போன் கூட என்னிடம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். சில நாட்கள் என்னை வீட்டிலேயே அடைத்து வைத்துவிட்டார்கள். என் பெற்றோர் பயந்ததால் என்னை வெளியே அனுப்ப மறுத்துவிட்டனர்’ என்று கூறி இருக்கிறார்.
    ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவு பிரபலமடைந்ததை தொடர்ந்து அவரது டாட்டூவும் தற்போது பிரபலமாகியுள்ளது. #PriyaWarrier #OruAdaarLove
    ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்து பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீசாகிறது. 

    தமிழில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். பிரியா வாரியரின் கண்ணசைவை தொடர்ந்து மார்பில் அவர் குத்தி இருக்கும் டாட்டூவும் பிரபலம் அடைந்துள்ளது. ’கார்ப் டயம்’ என்று லத்தீன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. ‘எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இந்த நொடியை அனுபவித்து வாழுங்கள்’ என்பது அதன் அர்த்தம்.



    இதுதவிர இந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்திலும் பிரியா வாரியர் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. #PriyaWarrier #OruAdaarLove

    மாணிக்க மலராயி பூவி பாடலுக்கு பிறகு ஒரு அடார் லவ் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான அடுத்த பாடலுக்கு கிடைத்த டிஸ்லைக்குகள் படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #OruAdaarLove #PriyaVarrier
    தனது கண் சிமிட்டலால் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் என்ற படத்தில் மாணிக்க மலராயி பூவி என்ற பாடலில் தான் அந்த காட்சி இடம்பெற்றது.

    அந்த படத்தில் இருந்து சமீபத்தில் இன்னொரு பாடல் வெளியிடப்பட்டது. தற்போது வெளியாகியிருக்கும் ‘ப்ரீக் பெண்ணே’ என்னும் ராப் வகை பாடல் லைக்ஸை விட டிஸ்லைக்ஸை அதிகம் பெற்று மோசமான பாடலாக டிரெண்டிங்கில் இருக்கிறது.

    இதற்கு முன் ஜஸ்டின் பீபரின் ‘பேபி’ பாடல்தான் அதிக டிஸ்லைக்குகளைப் பெற்றிருந்தது. அதுவும் தற்போது லைக்ஸ்களால் முறியடிக்கப்பட்டுவிட்டது. அந்த வரிசையில் தற்போது இந்த பாடலும் இணைந்திருக்கிறது. இரண்டு டிஸ்லைக் எண்ணிக்கைக்கும் இருக்கும் வித்தியாசம், சுமார் 2 லட்சத்து ஐம்பதாயிரம். இதனால் பிரியா வாரியரும் ஒரு அடார் லவ் படக்குழுவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் படம் வருகிற கிறிஸ்துமசுக்கு பல்வேறு மொழிகளில் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #OruAdaarLove #PriyaVarrier

    ப்ரீக் பெண்ணே பாடலை பார்க்க:

    ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற கண்சிமிட்டும் காட்சி மூலம் பிரபலமான ப்ரியா வாரியரை விளம்பர படம் ஒன்றில் நடிக்க வைக்க ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. #PriyaVarrier
    ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற `மாணிக்ய மலராய பூவே' பாடலில் இடம்பெற்ற கண்சிமிட்டும் காட்சி மூலம்
    பிரபலமான ப்ரியா வாரியர் இந்திய அளவில் ரசிகர்கள் குவிந்தனர். மேலும் சமூக வலைதளங்களில் முன்னணி நாயகிகளையும் பின்னுக்கு தள்ளினார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என பட வாய்ப்புகள் குவிய, ஒரு அடார் லவ் படத்தின் ரிலீசுக்கு பிறகே அடுத்த படங்களை ஏற்கும் முடிவில் இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கில் வெளியிட அதிக தொகைக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக கூறுகின்றனர். 

    இதுதவிர மாணிக்ய மலராய பாடல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. மத உணர்வுகளை புண்படுத்துவதாக பிரியா வாரியர் மற்றும் படத்தின் இயக்குனருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அவை தள்ளுபடி ஆனது. இந்த நிலையில் பிரியா வாரியருக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் வருகிறது. ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். 



    இப்போது மற்றொரு பெரிய கம்பெனி ஒன்று அவரை அணுகி உள்ளது. இதில் நடிக்க அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள முன்னணி நடிகைகள் இன்னும் ரூ.1 கோடி சம்பளத்தையே எட்டாத நிலையில், விளம்பரம் ஒன்றில் நடிக்க ப்ரியா வாரியருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக வெளியான தகவல் மலையாள நடிகைகளுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். #PriyaVarrier

    ×