search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு"

    ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 21,700 கனஅடியாக குறைந்தாலும் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
    ஒகேனக்கல்:

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு சென்றது. மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பியது. இரண்டரை லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இதனால் 2 மாதங்களுக்கு மேல் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு நீடித்தது. மேலும் சுற்றுலா பயணிகளும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. வெள்ளத்தில் மெயின் அருவி தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்தன. குப்பைகளும் தேங்கி கிடந்தன. குப்பைகளை அகற்றி விட்டு புதிதாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன. பெண்கள் குளிக்கும் அருவி அருகே இருந்த சுவர்களும் சேதம் அடைந்து இருந்தன. அவற்றையும் அதிகாரிகள் சீரமைத்தனர்.

    82 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 29-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடி முதல் 15 ஆயிரம் கனஅடி வரை வந்தது. கடந்த 3 நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதியான கொள்ளேகால் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை 10,700 கனஅடியாக வந்த நீர்வரத்து, நேற்று காலை 27,500 கன அடியாக உயர்ந்தது.

    இதனால் ஐந்தருவி, ஐவர்பாணி, மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    இதனால் ஆயுத பூஜை விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லுக்கு ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இன்று நீர்வரத்து 21,700 கனஅடியாக குறைந்தது. என்றாலும் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    இதே அளவில் நீர்வரத்து இருந்தால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒகேனக்கல் நீர் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பயன்படுவதில்லை. குடிநீருக்கு மட்டுமே பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆறு பள்ளமான பகுதியில் செல்வதாலும் தருமபுரி மாவட்ட விவசாய பகுதிகள் மேடான பகுதியில் அமைந்துள்ளதாலும் இந்த நீரை விவசாயத்திற்கு பயன் படுத்தாத நிலை இருந்து வந்தது.

    தற்போது இந்த நீரை பம்பிங் செய்து குடிநீர் தொட்டிகளில் ஏற்றி குழாய் மூலம் 238 ஏரிகளிலும், அணைகளிலும் நிரப்ப புதிய திட்டத்தை தருமபுரி மாவட்ட நிர்வாகம் மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி மாவட்டம் செழிப்படையும்.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    ஒகேனக்கல்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்காளக நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

    கர்நாடக மாநிலத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டராம்பாளையம் ஆகிய காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலை பெய்த பரவலான மழையால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து 9 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

    மழை குறைந்ததால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று சரிந்து 7400 கனஅடியாக குறைந்தது. மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நேற்று ஒகேனக்கல்லுக்கு சற்று அதிகரித்து நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

    இதனால் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சுற்றுலா பயணிகள் மெயினருவி, சினிபால்ஸ் ஆகிய பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். கோத்திக்கல் பாறையில் இருந்து மணல் திட்டு வரை பரிசல் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. #Hogenakkalfalls
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கர்நாடக-தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 66 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து நேற்று 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இன்று 15-வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் காவிரி ஆற்றில் ஓடும் வெள்ளப்பெருக்கை பார்த்து விட்டு செல்கிறார்கள்.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

    சுற்றுலா பயணிகள் காவிரி கரையோரம் நின்று செல்பி எடுக்க கூடாது என்றும் எச்சரித்து உள்ளனர்.  #Hogenakkalfalls



    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. #Hogenakkalfalls
    தருமபுரி:

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது.

    காலை 8 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    நேற்று இரவு படிப்படியாக திடீரென்று நீர்வரத்து அதிகரித்து இன்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டு இருந்தது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இருப்பினும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை பூட்டி சீல் வைத்து போலீசார் மற்றும் தனியார் பாதுகாவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கல்லுக்கு கார், வேன், இருசக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மடம் சோதனைச்சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் தர்மபுரி, பென்னாகரத்தில் இருந்து பஸ்கள் மூலம் ஒகேனக்கல்லுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பரிசல் இயக்கவும், மெயின் அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை இன்று 12-வது நாளாக நீடித்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் அளந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.  #Hogenakkalfalls

    ×