search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா பொதுச்சபை கூட்டம்"

    அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிக்கும் என கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார். #EU #DonaldTusk
    நியூயார்க் :

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

    ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும்.

    ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

    இந்தநிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க், நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், ‘ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம், ஐரோப்பிய கூட்டமைப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கும் நல்லது. எனவே ஈரான் இந்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறவரையில், ஐரோப்பிய கூட்டமைப்பும் நீடிப்பதில் உறுதி கொண்டு உள்ளது.’

    மேலும், ‘ஈரானின் பிராந்திய நடத்தை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை குறித்த கவலைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது’ என்றும் குறிப்பிட்டார். #EU #DonaldTusk
    ஒரே ஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி இந்தியாவை மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார். #SAARC #ShahMehmoodQureshi #SushmaSwaraj
    நியூயார்க் :

    அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இதற்கிடையே, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் எனும் அமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. சார்க் அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நமது மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பு மேம்பபட வேண்டும் எனில் பிராந்திய ஒத்துழைப்பிற்கு சமூக அமைதியும், பாதுகாப்பும் இன்றியமையாதது. பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். எவ்வித பாகுபாடும் இல்லாமல் பயங்கரவாதிகளுக்கு சமூகத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பேசினார்.

    ஆனால், அவரது பேச்சு நிறைவடைந்த பின்னர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியின் உரையை கேட்காமல் பாதியிலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறி ப்ரிக்ஸ் அமைப்பு நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க சென்றுவிட்டார்.

    சுஷ்மாவின் செயலை மறைமுகமாக கண்டித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி, பிராந்திய ஒத்துழைப்பிற்கு எதிராக இந்தியா தடைகளை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    கூட்டத்தின் பாதியிலேயே அவர் (சுஷ்மா) வெளியேறியதற்கு காரணம் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம். பிராந்திய ஒத்துழைப்பை பற்றி அவர் இந்த கூட்டத்தில் பேசினார். பிராந்திய ஒத்துழைப்பை பற்றி பேசுவதற்காக இங்கு அனைவரும் அமர்ந்திருக்கும் போது பேச்சுவார்த்தைக்கு தடை    ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பிராந்திய ஒத்துழைப்பு எப்படி சாத்தியமாகும் ?.

    சார்க் அமைப்பின் செயல்திட்டங்கள் மூலம் கிடைத்த வெற்றிகளை பற்றி பேச நான் தயங்கவில்லை. ஆனால், பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் நாடுகளின் செழிப்புக்கு ஒரே ஒரு தடை உள்ளது. ஒரேஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #SAARC #ShahMehmoodQureshi #SushmaSwaraj
    ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடரும் என ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜாரிப் தெரிவித்துள்ளார். #MohammadJavadZarif #SushmaSwaraj #UNGA
    நியூயார்க் :

    ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா அந்நாட்டிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என உத்தரவிட்டது. மீறி இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

    ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கை காரணமாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அளவை குறைக்க இந்தியா திட்டமிட்டது. அதேசமயம் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

    கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார். ஒருவேளை அதற்கு ஒப்புதல் கிடைத்தாலும் அந்த விலக்கு குறைந்த காலத்துக்கு தான் வழங்கப்படும் என மைக் பாம்பியோ கூறினார்.

    ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்பின் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்பது அமெரிக்காவின் உத்தரவு.

    இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின் போது இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜாரிப் இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய முகமது ஜாவத், ஈரானிடம் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடரும் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ எங்கள் இந்திய நண்பர்கள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி போன்றவற்றை நோக்கத்தின் அடிப்படையில் செய்பவர்கள். இதே கருத்தைத் தான் சுஷ்மா சுவராஜூம் என்னிடம் தெரிவித்தார். நாங்கள் இந்தியாவுடன் விரிவான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.

    இந்த ஒத்துழைப்பு எரிசக்தி துறையிலும் தொடர்கிறது. ஏனென்றால், இந்தியாவின் நம்பகமான எரிசக்தி வினியோகஸ்தராக ஈரான் எப்பொழுதும் இருந்து வருகிறது. எனவே, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா தொடரும்’ என அவர் தெரிவித்தார்.

    ஈரானிடன் இருந்து சீனாவுக்கு அடுத்ததாக அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடு இந்தியாவாகும், அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பிறகு ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவை இந்தியா  குறைத்துள்ளதே தவிற முற்றிலும் நிறுத்திவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #MohammadJavadZarif #SushmaSwaraj #UNGA
    ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின் போது வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் எனது நண்பர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். #UNGA2018 #SushmaSwaraj #DonaldTrump
    நியூயார்க் :

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இரண்டு வாரம் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று நடப்பு ஆண்டில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து பொதுவிவாதம் நடத்துவார்கள்.

    இந்த ஆண்டிற்கான ஐ.நா பொதுச்சபையின் 73-வது கூட்டம், இன்று துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.  இந்த நிலையில், உலக போதை பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய கூட்டம் ஒன்று டொனால்டு டிரம்ப் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்ட முடிவில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே சுவராஜை கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்.  அதன்பின் டிரம்பிடம் சுஷ்மாவை அறிமுகப்படுத்தினார்.

    அதன்பின் சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அன்பினை பெற்று வந்துள்ளேன் என டிரம்பிடம் கூறினார்.  இதற்கு டிரம்ப், நான் இந்தியாவை நேசிக்கிறேன். எனது நண்பர் பிரதமர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள் என சுஷ்மா சுவராஜிடம் கூறினார். #UNGA2018 #SushmaSwaraj #DonaldTrump
    ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், ஸ்பெய்ன், கொலம்பியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #UNGA2018 #SushmaSwaraj
    நியூயார்க் :

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இரண்டு வாரம் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று நடப்பு ஆண்டில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து பொதுவிவாதம் நடத்துவார்கள்.

    இந்த ஆண்டிற்கான ஐ.நா பொதுச்சபையின் 73-வது கூட்டம், இன்று துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில், உலக போதை பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய கூட்டம் ஒன்று டொனால்டு டிரம்ப் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற சுஷ்மா சுவராஜ் கூட்டத்தின் முடிவில் ஸ்பெய்ன், கொலம்பியா, நேபாளம் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின் போது, அந்நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் தெரிவித்துள்ளார். #UNGA2018 #SushmaSwaraj
    ×