search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழுத்துத்தேர்வு"

    • திருமங்கலம்-காவலர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடந்தது.
    • தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது.

    திருமங்கலம்

    தமிழக முழுவதும் இன்று காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எழுத்து தேர்வு நடந்தது.

    தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது. பேனா மற்றும் ஹால் டிக்கெட் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். முழுக்கை சட்டை அணிந்தவர்கள் மடக்கி விடக்கூடாது, பொத்தான் போட்டு மூடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.

    பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பலத்த சோதனைக்கு பின் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனும திக்கப்பட்டனர். திருமங்கலம் வி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கள்ளிக்குடி தனியார் பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிக்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேற்கண்ட 2 தேர்வு மையங்களில் 2000 பேர் தேர்வு எழுதினர்.

    • கிராம உதவியாளர் பணியிடத்துக்கு எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 114 கிராம உதவியாளர் பணியிட ங்களுக்கு இன சுழற்சி முறையில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இந்த பதவிகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இந்த விண்ணப்ப ங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 4.12.2022 அன்று நடைபெற இருக்கும் எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டனாது (ஹால் டிக்கெட்) விண்ணப்ப தாரர்களின் கைப்பேசி எண்ணிற்கு குறுசெய்தியாக அனுப்பப்படும்.

    மின்னஞ்சல் முகவரி வழியாக நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது விண்ணப்பதாரர் தமிழக அரசின் இணைய தளமான https://www.tn.gov.in, வருவாய் நிர்வாகத்துறையின் இணையதளமான https://cra.tn.gov.in மற்றும் விருதுநகர் மாவட்ட இணையதளமான https://virudhunagar.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×