search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏ வழக்கு"

    11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #MLADisqualify

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்டம் மயிலை பகுதி தி.மு.க. பிரமுகர் வில்லவன் இல்லத் திருமண விழா நுங்கம்பாக்கத்தில் நடந்தது. மணமக்கள் கதிரவன்- புனிதா திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

    அப்போது மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

    இங்கு நடைபெற்ற திருமணம் ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு திருமணம் நடைபெற்றுள்ளது.

    இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள், சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணங்களுக்கு 1967-ம் ஆண்டுக்கு முன்பு சட்டப்படி அங்கீகாரம் கிடைக்காத நிலை இருந்தது.

    1967-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றது. அப்போது முதல்- அமைச்சராக அண்ணா பொறுப்பேற்றதும், சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும் என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி தந்தார்.

    அந்த வகையில் இந்த திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்துடன் நடந்துள்ளது. எனவே நமக்கு தெரிந்த, புரிந்த, நாம் அறிந்த, நமது தாய்மொழியான தமிழ் மொழியில் இந்த திருமணம் நடந்துள்ளது.

    அப்படிப்பட்ட அழகு தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தவர் தலைவர் கலைஞர். இன்றைக்கு தமிழை எப்படியாவது திட்டமிட்டு, இந்திமொழியை, சமஸ்கிருதம் மொழியை கொண்டு வந்து திணித்து அதன்மூலம் தமிழுக்கு ஒரு ஆபத்து ஏற்படுத்துகிற நிலையில் மத்தியில் உள்ள மோடி ஆட்சி ஈடுபட்டு வருகிறது. அதை தவிடு பொடியாக்கும் வகையில் தமிழ் பெயர்களை சூட்டுகிற அந்த சூழ்நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது. அது முடிந்ததும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி வரப்போகிறது என்று இங்கு பேசினார்கள்.

    எனக்கு ஒரு சந்தேகம், பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் பொதுத் தேர்தல் வந்துவிடும் என தெரிகிறது. காரணம் இன்று தமிழகத்தில் ஒரு மைனாரிட்டி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை மத்தியில் உள்ள பா.ஜனதா ஆட்சி முட்டுக்கொடுத்து காப்பாற்றி கொண்டிருக்கிறது.

    2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல். ஏ.க்கள் வாக்களித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி செல்லுமா? செல்லாதா? என்பதில் பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பு வர உள்ளது. அப்போது நிச்சயமாக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருக்காது.

    இதை சொன்னால் நான் கனவு காண்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நான் கனவு காணவில்லை. நினைவாக நடக்க போகிறது.

    உங்கள் ஆட்சியை கவிழ்க்க நாங்கள் கனவா காண வேண்டும்? கனவெல்லாம் காண வேண்டிய அவசியமே கிடையாது. நினைவாகத்தான் உருவாக்கப் போகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். #MKStalin #MLADisqualify

    ராம்கோபால் வர்மா படத்தில் சந்திரபாபு நாயுடுவை அவமதிக்கும் பாடலை நீக்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டில் எம்எல்ஏ பிட்டாபுரம் தொகுதி எம்எல்ஏ வழக்கு தொடர்ந்துள்ளார். #ChandrababuNaidu #Ramgopalvarma
    நகரி:

    மறைந்த ஆந்திர முதல்-மந்திரியும், பிரபல நடிகருமான என்.டி.ராமராவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் ராம் கோபால் வர்மா “லட்சுமீஸ் என்.டி.ஆர்.” என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறார்.

    இப்படத்தில் தகா தகா (மோசடி... மோசடி) என்ற பாடல் வெளியிடப்பட்டது. பாடல் காட்சியில் தகா என்னும் வார்த்தை வரும்போது ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை காட்டி உள்ளனர்.

    இது சந்திரபாபு நாயுடுவை அவமதிப்பதாக உள்ளதாகவும் இப்பாடல் காட்சியை நீக்கிவிட வேண்டும் என்று கூறி ஐதராபாத் ஐகோர்ட்டில் பிட்டாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வர்மா மனுதாக்கல் செய்தார்.

    அதில் இந்த பாடல் காட்சியை யூ-டியூப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்கி விடும்படி சென்சார் போர்டுக்கு உத்தரவிடும்படி மனுவில் கேட்டுக் கொண்டார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், ராஜசேகர ரெட்டி, மத்திய, மாநில சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

    மனுதாரரின் கோரிக்கை மற்றும் இது சம்பந்தப்பட்ட முழு விவரங்களையும் தங்கள் முன் வைக்கும்படி நீதிமன்றம் நோட்டீசில் உத்தரவிட்டது. அடுத்த கட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

    இப்படத்தில் என்.டி.ராமராவின் 2-வது மனைவி லட்சுமி பார்வதி கதையை வைத்து இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ChandrababuNaidu #Ramgopalvarma
    ×