என் மலர்
நீங்கள் தேடியது "எப்ஸ்டீன் ஃபைல்ஸ்"
- எந்த பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இல்லை
- முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை நடத்த திட்டம்
மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்கத் திட்டமிட்டிருந்தபோது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு "முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை" செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரைச் சபைக்கு வர வேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு பதலளித்துள்ள பிரியங்கா காந்தி,
"பிரதமர் சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார். நேற்று, மூன்று பெண்கள் இருக்கைக்கு முன்னால் நின்றதால், அவைக்கு வர அவருக்குத் துணிச்சல் இல்லையா... இது என்ன முட்டாள்தனம்? இங்கு எந்த விவாதமும் நடக்கவில்லை. காரணம் எந்த பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இல்லை" என தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடியின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது.
- நிச்சயமாக ஜெஃப்ரி தனக்குத்தானே ஒரு மின்னஞ்சலை எழுதியிருக்கிறார்.
அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட 'எப்ஸ்டீன் கோப்புகள்' உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் உலகின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப், பிரதமர் மோடி, தொழிலதிபர் பில் கேட்ஸ் ஆவர்.
இந்நிலையில் பில் கேட்ஸ் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்புக் கோரியுள்ளார். சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில், பில் கேட்ஸ் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனால் அவருக்குப் பாலியல் தொற்று நோய் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், எப்ஸ்டீன் தன்னை அவதூறு செய்வதற்காகவே அத்தகைய மின்னஞ்சல்களை எழுதியிருப்பார் என்றும் பில் கேட்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பில் கேட்ஸ்,
"அவருடன் நான் கழித்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துகிறேன், நான் அப்படிச் செய்ததற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்," என்று கேட்ஸ் கூறினார். "நிச்சயமாக ஜெஃப்ரி தனக்குத்தானே ஒரு மின்னஞ்சலை எழுதியிருக்கிறார். நான் அவர் குறிப்பிட்டுள்ளவாறு எந்த மின்னஞ்சலையும் எழுதவில்லை. மேலும் அதில் உள்ள தகவல்கள் பொய்யானவை. அவருடைய உள்நோக்கம் என்னவாக இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஏதோ ஒரு வகையில் என்மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளார்." என்று தெரிவித்தார்.
மேலும் எப்ஸ்டீன் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட பிறகும் 2011 இல் அவரை சந்தித்ததாக கேட்ஸ் ஒப்புக்கொண்டார். ஆனால் ஒருபோதும் எப்ஸ்டீனின் தனியார் தீவுக்கு சென்றதில்லை என்றும் தெரிவித்துள்ளார். "அவருடன் நேரத்தைச் செலவிட்டது நான் செய்த முட்டாள்தனம், அவரைத் தெரிந்ததற்காக வருந்தும் பல நபர்களில் நானும் ஒருவன்." என்றும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுதொடர்பாக பேசியிருந்த பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா, எப்ஸ்டீன் தொடர்பான இந்த ஆவணங்கள் தனது திருமண வாழ்க்கையின் வேதனையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
- எப்ஸ்டீன் மற்றும் பிறரால் எனக்கு எதிராக செய்யப்பட்ட சதி தவிர வேறு எதுவும் என்னைப் பற்றி வெளிவரவில்லை
- நீங்கள் மிகவும் மோசமான செய்தியாளர். அதனால்தான் CNN-க்கு யாரும் ரேட்டிங் கொடுப்பதில்லை
அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை ஜன.31ம் தேதி வெளியிட்டது. இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ, பிரதமர் மோடி, பில் கேட்ஸ், எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன் போன்றோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இதனால் இந்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தரவுகள் வெளியான பிறகே அமெரிக்கா- இந்தியா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பாக பெண் நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, நீ சிரித்து நான் பார்த்ததே இல்லை என ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர், இப்போது வெளியாகியுள்ள திருத்தப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிருப்தியில் உள்ளனர். சில முழுமையான சாட்சி நேர்காணல்கள் கூட முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இன்னும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "நீங்கள் மிகவும் மோசமான செய்தியாளர். அதனால்தான் CNN-க்கு யாரும் ரேட்டிங் கொடுப்பதில்லை" என்று சாடினார்.
ஓவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் CNN செய்தியாளர் கைட்லான் காலின்ஸ் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு காலின்ஸைப் பார்த்து, "நான் உங்களை 10 ஆண்டுகளாக அறிவேன், ஆனால் உங்கள் முகத்தில் ஒரு சிரிப்பைக்கூட நான் பார்த்ததில்லை. நீங்கள் ஏன் சிரிப்பதில்லை தெரியுமா? நீங்கள் உண்மையைச் சொல்வதில்லை என்பது உங்களுக்கே தெரியும்" என்று தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கிளறுவது தேசத்திற்கு நல்லதல்ல என்றும், இதிலிருந்து மக்கள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய ட்ர்ம்ப், "எப்ஸ்டீன் மற்றும் பிறரால் எனக்கு எதிராக செய்யப்பட்ட சதி தவிர வேறு எதுவும் என்னைப் பற்றி வெளிவரவில்லை, இப்போது நாடு வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் நடந்த 45 நிமிடங்களுக்குள், சிஎன்என் (CNN) நிறுவனம் கெய்ட்லான் காலின்ஸிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில்,
"அவர் ஒரு தனித்துவமான பத்திரிகையாளர், வெள்ளை மாளிகையிலிருந்தும் களத்திலிருந்தும் ஒவ்வொரு நாளும் மிக ஆழமாகவும், மன உறுதியுடனும் செய்திகளை வழங்குகிறார். தனது செயல்திறனை செய்தி வாசிப்பாளராகவும், சிஎன்என் தளங்களிலும் ஒவ்வொரு நாளும் மிகத் திறமையாக வெளிப்படுத்துகிறார், உலகெங்கிலும் உள்ள நேயர்களுக்கு யாரை நம்பலாம் என்று தெரியும்" எனக் குறிப்பிட்டுள்ளது.






