search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உஸ்பெகிஸ்தான்"

    உஸ்பெகிஸ்தானில் நடந்து வரும் மாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்தார். #SushmaSwaraj #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue
    சமர்கன்ட்: 

    மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு அந்த நாடுகளுக்கு சென்று வந்தார். 

    இந்நிலையில், மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களும் முதன்முறையாக ஒன்றுகூடி உஸ்பெகிஸ்தான் நாட்டில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் பங்கேற்க இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இருநாள் பயணமாக நேற்று அந்நாட்டின் தலைநகரான சமர்கன்ட் நகரை சென்றடைந்தார். 

    சமர்கன்ட் விமான நிலையத்தில் அவருக்கு உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்அஜிஸ் கமிலோவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



    இந்நிலையில், இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகள் பங்கேற்ற மத்திய ஆசிய நாடுகளின் மாநாடு இன்று நடைபெற்றது. அப்போது மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:

    சமர்கன்டில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானும் பங்கு பெற்றிருப்பது அளவிலா மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த உஸ்பெகிஸ்தான் அரசுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்தார். #SushmaSwaraj #CentralAsiaDialogue #FirstCentralAsiaDialogue
    உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காட் மிர்ஜியோயேவ் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. #PMModi #Uzbekistan #PresidentShavkatMirziyoyev
    புதுடெல்லி:

    இந்திய தலைநகர் டெல்லியில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபர் ஷவ்காட் மிர்ஜியோயேவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான அரசு ரீதியான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் இருநாடுகளின் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அதையடுத்து, பிரதமர் மோடி மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபர் முன்னிலையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அந்நாட்டு அதிகாரிக்கு அளித்தார்.

    இதையடுத்து, பேசிய பிரதமர் மோடி, சிறப்பு வாய்ந்த நண்பர் என உஸ்பெகிஸ்தான் அதிபரை குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில் நடைபெற்ற ஆலோசனை இருநாடுகளின் உறவுக்கு நல்வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.



    பிரதமர் மோடியை தொடர்ந்து பேசிய உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காட், பழமையான வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் கொண்ட இந்திய மக்களை தாம் மதிப்பதாக கூறியுள்ளார். #PMModi #Uzbekistan #PresidentShavkatMirziyoyev
    அரசுமுறை பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் வந்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தாஷ்கென்ட் நகரில் மரணம் அடைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு மரியாதை செலுத்தினார்.
    தாஷ்கென்ட்:

    மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்த பயணத்தின் நிறைவுகட்டமாக நேற்று உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் அஜிஸ் காமிலோவ் மலர்கொத்து அளித்து அன்புடன் வரவேற்றார்.

    பல்வேறு துறைகளில் இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் உயரதிகாரிகள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ்-ஐ சுஷ்மா சந்தித்து பேசினார்.

    சுதந்திர போராட்ட தியாகியும் இந்தியாவின் இரண்டாவது பிரதமருமான லால் பகதூர் சாஸ்திரி இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் செய்வதற்காக கடந்த 1966-ம் ஆண்டு உஸ்பெகிஸ்தான் தலைநகரான தாஷ்கென்ட் நகருக்கு வந்திருந்தார்.

    10-1-1966 அன்று வரலாற்று சிறப்புமிக்க இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. அதற்கு மறுநாள் 11-1-1966 அன்று லால் பகதூர் சாஸ்திரி(61) மாரடைப்பால் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும், அவரது மரணம் இயற்கையானது அல்ல, அமெரிக்க உளவுத்துறையின் கைவரிசையாக இருக்கலாம் என அப்போது பரவலாக ஒரு கருத்து நிலவியது.


    மறைந்த லால் பகதூர் சாஸ்திரிக்கு அவரது உயிர் பிரிந்த தாஷ்கென்ட் நகரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்துக்கு இன்று சென்ற மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், லால் பகதூர் சாஸ்திரியின் மார்பளவு சிலைக்கு மலர்வளையம் சமர்ப்பித்து மரியாதை செலுத்தினார்.

    அந்த சிலையை வடிவமைத்த சிற்பி யாக்கோவ் ஷப்பிரி என்பவர் சுஷ்மாவுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.
    ×