search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சுற்றுச்சூழல் தின விழா"

    • சுற்றுச்சூழல் தின விழா உடுமலை கிளைச்சிறையில் கொண்டாடப்பட்டது.
    • கிளைச்சிறை வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நீதிபதிகள் நட்டனர்.

    உடுமலை :

    உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா உடுமலை கிளைச்சிறையில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், உடுமலை ஜே.எம். எண்.1 மாஜிஸ்திரேட்டு கே. விஜயகுமார், ஜே.எம். எண்.2 மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதைத் தொடர்ந்து கிளைச்சிறை வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நீதிபதிகள் நட்டனர். இதையடுத்து உலக சுற்றுச்சூழல் தின விழா விழிப்புணர்வும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. இதில் உடுமலை வக்கீல் சங்க தலைவர் மனோகரன், வக்கீல்கள் தம்பி பிரபாகரன், சத்தியவாணி உடுமலை கிளைச்சிறை காவல் கண்காணிப்பாளர் டி.கே.ஆர்.சபாபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
    • மரக்கன்றுகள் நடும் விழாவும் நடந்தது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா மற்றும் இளைஞர் மன்றத்தின் சார்பில் கொட்டரை கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பரஞ்சோதி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் திருமுருகன், துணை தலைவர் ரெங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா மரக்கன்று நடுதலை தொடங்கிவைத்தார்.

    சிறப்பு விருந்தினராக தத்தனூர் எம்ஆர்சி கல்விநிறுவன செயலாளர் கமல்பாபு கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதில் 100க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆதனூர் அரசு டாக்டர் முத்துசாமி, கிராம முக்கியஸ்தர்கள் பொன்னுசாமி, தர்மதுரை, மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பாஞ்சாலை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


    ×