search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Circle Legal Affairs Committee"

    • சுற்றுச்சூழல் தின விழா உடுமலை கிளைச்சிறையில் கொண்டாடப்பட்டது.
    • கிளைச்சிறை வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நீதிபதிகள் நட்டனர்.

    உடுமலை :

    உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா உடுமலை கிளைச்சிறையில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், உடுமலை ஜே.எம். எண்.1 மாஜிஸ்திரேட்டு கே. விஜயகுமார், ஜே.எம். எண்.2 மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதைத் தொடர்ந்து கிளைச்சிறை வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நீதிபதிகள் நட்டனர். இதையடுத்து உலக சுற்றுச்சூழல் தின விழா விழிப்புணர்வும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. இதில் உடுமலை வக்கீல் சங்க தலைவர் மனோகரன், வக்கீல்கள் தம்பி பிரபாகரன், சத்தியவாணி உடுமலை கிளைச்சிறை காவல் கண்காணிப்பாளர் டி.கே.ஆர்.சபாபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி பாபநாசம் கிளை சிறையில் நடைபெற்றது.
    • மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான அப்துல் கனி கிளை சிறை வளாகத்தில் மரக்கன்று களை நட்டு வைத்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி பாபநாசம் கிளை சிறையில் நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் உத்தரவுப்படி, சார்பு நீதிபதி சுதா வழிகாட்டுதலின்படியும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமான அப்துல் கனி கிளை சிறை வளாகத்தில் மரக்கன்று களை நட்டு வைத்தார்.

    அப்போது நாமும் நம் குடும்பத்தினர் ஒவ்வொ ருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்று ஆவது நட்டு பராமரித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

    பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி பாபநாசம் கிளை சிறையில் நடைபெற்றது.இதில் அரசு வழக்கறிஞர் வெற்றி செல்வன், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள்கம்பன், ஜெயகுமார் மற்றும் வழக்கறிஞர்கள்கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி யில் பாபநாசம் கிளை சிறையின் கண்காணி ப்பாளர் திவான், கிளைச் சிறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவில் சட்ட பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

    ×