search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக சுற்றுச்சூழல் தின விழா
    X

    உலக சுற்றுச்சூழல் தின விழா

    • உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
    • மரக்கன்றுகள் நடும் விழாவும் நடந்தது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா மற்றும் இளைஞர் மன்றத்தின் சார்பில் கொட்டரை கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பரஞ்சோதி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் திருமுருகன், துணை தலைவர் ரெங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா மரக்கன்று நடுதலை தொடங்கிவைத்தார்.

    சிறப்பு விருந்தினராக தத்தனூர் எம்ஆர்சி கல்விநிறுவன செயலாளர் கமல்பாபு கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். இதில் 100க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆதனூர் அரசு டாக்டர் முத்துசாமி, கிராம முக்கியஸ்தர்கள் பொன்னுசாமி, தர்மதுரை, மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பாஞ்சாலை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


    Next Story
    ×