search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கழிப்பறை தினம்"

    • உலக கழிப்பறை தினம் கொண்டாடப்பட்டது
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் முழு சுகாதார இயக்கம் சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சுகாதார ஓட்டம் மற்றும் நடைபயண பேரணி நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணியில் நோயின்றி வாழ கழிப்பறையை பயன்படுத்தவும், கிராமத்தையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாக்க அனைவரும் கழிப்பறையை பயன்படுத்தவும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பேரணியை தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பொது இடங்களில் குப்பையை கொட்டி அசுத்தம் செய்ய மாட்டோம் என தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    இன்று உலக கழிப்பறை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 587 ஊராட்சிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி குளிச்சப்பட்டு கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்ட தூய்மை நடை பயண விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குளிச்சப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி தலைமை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் புவனேஸ்வரி, கிராம அலுவலர் கோவிந்தராஜ், ஊராட்சி செயலாளர் சசிகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம், 3-வது வார்டு உறுப்பினர் குருமூர்த்தி உமாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அனைவரும் திறந்த வெளியில் மலம் கழிப்பதில்லை, நெகிழி பொருட்களை பய ன்படுத்துவதில்லை, பொது இடங்களில் குப்பையை கொட்டி அசுத்தம் செய்ய மாட்டோம் என தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பேரணியில் பள்ளி மாணவ-மாணவியர், கிராம மக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை சுமந்து வீதி வீதியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா நடராஜன் நன்றி கூறினார்.

    ×