search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உருளைக்கிழங்கு மண்டி"

    • வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்படுவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • மண்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது.

    இதில் 6 வார்டு பகுதியில் உருளைக்கிழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம், சாக்கு உள்ளிட்ட மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இதன்மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து உருளைக்கி ழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம் சாக்கு உ ள்ளிட்டவை ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ள ப்படுகிறது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பகுதிகளில் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.

    இதில் மேட்டு ப்பாளையம் உருளைக்கி ழங்கு மண்டி பகுதிகளில் பாக்குகார சாலை செல்லும் வழியில் உள்ள கிழங்கு மண்டி சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இச்சாலை வழியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மகாஜன பள்ளி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மக்கள் சென்று வரும் வழியாக உள்ளது. மேலும் நெல்லித்துறை சாலை வழியாக தினசரி நிலகீரி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய வாகனங்களில் எடுத்து செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் இச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்களும், வியாபா ரிகளும் பெரும் அலைச்சலுக்கு உள்ளாகி வருகின்றன. எனவே இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியின் உபதலைவர் எம்.என்.கோபால், செயலாளர் பி.ரங்கசாமி ஆகியோர் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டி பகுதியில் தினசரி கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இத ன்மூலம் ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உள்ளது.

    இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் உருளைக்கிழங்கு மண்டி பகுதிகளில் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×